பக்கம் எண் :

இந்திரசாலம்69


     (பொ-நி.) துகில்பெற்றனம் என்று சுலாவுகைய;  விசும்பை அதுக்கும் எயிற்றின; (எ-று.)

     (வி-ம்.) சுற்ற - சுற்றிக்கொள்ள, நிணத்துகில்-கொழுப்பாகிய ஆடை.
சுலாவுதல்  - சுற்றிக்  கொள்ளுதல்.   வெறும்   கைய - வெறுமையாகிய
கைகளையுடைய. விசும்பு-வெறுவெளி. அதுக்குதல் -மெல்லுதல். எயிறு-பல்.
                                                         (18)

இதுவும் அது

171. கயிற்றுறி யொப்பதொர் பேய்வறி தேஉடல்
     கௌவின தொக்கவிரைந்து
எயிற்றைய துக்கிநி லத்திடை பேய்கள்
   இரைத்தன மேல்விழவே.

     (பொ-நி.)   பேய்,  கௌவின  தொக்க,  எயிற்றை  அதுக்கி  விழ,
பேய்கள் நிரைத்தன; (எ-று.)

     (வி-ம்.)  உறிகயிறு ஒப்பது - உறியின்  கயிற்றை  ஒத்தது.  நரம்பு
தோன்ற மெலிந்திருத்தலால், கயிற்றுறி ஒப்பாயிற்று. எயிறு-பல்,  அதுக்கி-
கடிக்க. இரைத்தன-கூச்சலிட்டன.                              (19)

அப்பேய்நிலை கண்ட யோகினி இயல்பு கூறியது

172.முறம்பல போலந கங்கண்மு றிந்து
     முகஞ்சித றாமுதுகுந்
திறம்பிவி லாவிற யோகினி மாதர்
   சிரித்துவி லாஇறவே.

     (பொ-நி.)  நகங்கள் முறிந்து முகம்சிதறா, முதுகுந்திறம்பி, விலாவிற,
யோகினி மாதர்சிரித்து விலா இறவே; (எ-று.)

     (வி-ம்.)   முறம்-சுளகு.  சிதறா-சிதைய. முதுகு திறம்பி-முதுகு மாறி.
விறல்-வலிமை. விலா-குறுக்கு எலும்பு.இற-முரிய.                  (20)

பேய்கள் இந்திரசாலத்தை நிறுத்த மொழிந்தது கூறியது

173.அக்கணம் ஆளும்அ ணங்கினை வந்தனை
     செய்துக ணங்களெலாம்
இக்கண மாளும்இ னித்தவிர் விச்சை்
   எனக்கைவி திர்த்தலுமே.