பக்கம் எண் :

70கலிங்கத்துப்பரணி

     (பொ-நி.) கணம்  அணங்கினை  வந்தனைசெய்து, "கணங்களெலாம்
மாளும்;  விச்சையைத்  தவிர்" என, கைவிதிர்த்தலும்; (எ-று.)

     (வி-ம்.)  கணம்-பேய்க்கூட்டம்.  அணங்கு-காளி.  மாளும்-இறக்கும்.
விச்சை-இந்திரசாலம்.  கைவிதிர்த்தல் - கைநடுங்குதல்.              (21)

முதுபேய் காளியிடம் மொழிந்தது கூறியது

174. கொற்றவர்கோன் வாளபயன் அறிய வாழுங்
     குவலயத்தோர் கலையனைத்துங் கூற ஆங்கே
கற்றுவந்தார் கற்ற அவன் காணு மாபோல்
    கடைபோகக் கண்டருள்என் கல்வி யென்றே.

     (பொ-நி.) "குவலயத்தோர்   கூற,   கற்றுவந்தார்   கற்ற   அவன்
காணுமாபோல் என் கல்வி கண்டருள்"  என்று. (எ-று.)

     (வி-ம்.)கொற்றவர்கோன்- அரசர்க்கரசன். அபயன்-குலோத்துங்கன்.
வாழும்-புகழொடு வாழும். குவலயம்-உலகம்.  கலை-பல  அறிவுத்துறைகள்,
கற்ற-தாம்    கற்றவைகளை,    அவன் - குலோத்துங்கன்.   காணும் ஆ
-கண்டறிகின்றவாறு.  கடைபோக-முடிய.                         (22)

இந்திரசாலம் நிறுத்தியது கூறியது

175.வணங்குதலும் கணங்களெலாம் மாயப் பாவி
       மடுத்தெம்மை மறுசூடு சுடுவை யாகில்
அணங்கரசின் ஆணைஎன வணங்கும் இப்போது
    அவைதவிர்எங் கிவைகற்றா யென்ன ஆங்கே.

     (பொ-நி.) வணங்குதலும், கணங்களெலாம் "சுடுவையாகில்,ஆணை"
என, அணங்கும் "தவிர்" இவை எங்கு கற்றாய்; என்ன; (எ-று.)

     (வி-ம்.)  வணங்குதலும் -  முதுபேய்    வணங்குதலும்.   கணம்
-பேய்க்கூட்டம்.  மறித்து-மறுபடியும்.  சூடு-வருத்துதல். அணங்கரசு-காளி.
என-என்றுசொல்ல. அவை-இந்திரசாலம். தவிர்-விட்டுவிடு.         (23)