பக்கம் எண் :

இந்திரசாலம்71


முதுபேய் வரலாறு கூறியது

176.நின்முனிவும் சுரகுருவின் முனிவும்அஞ்சி
      நிலையரிதென்று இமகிரிபுக் கிருந்தேற்கு ஒளவை
தன்முனிவு மவன்முனிவுந் தவிர்க என்று
    சாதனமந் திரவிச்சை பலவுந் தந்தே.

     (பொ-நி.) (முனிவும்) (முனிவும்)  அஞ்சி இமகிரி புக்கு இருந்தேற்கு
(முனிவும்) (முனிவும்) தவிர்க என்று விச்சை பலவும் தந்து; (எ-று.)

     
(வி-ம்.)முனிவு - வெகுளி.  சுரகுரு - சோழன்.  நிலை-இவ்விடத்து
நிலைபெற்றிருத்தல். ஒளவை - தாயாகிய காளி. அவன்; சுரகுரு.  சாதனம்-
கருவியாகிய வித்தை.                                        (24)

இதுவும் அது

177.உன்னுடைய பழவடியா ரடியாள் தெய்வ
      உருத்திரயோ கினியென்பாள் உனக்கு நன்மை
இன்னமுள கிடைப்பனஇங் கிருக்க என்ன
    யானிருந்தேன் சிலகாலம் இருந்த நாளில்.

     (பொ-நி.) அடியாள்(ஆகிய)  உருத்திர யோகினிஎன்பாள் "நன்மை
உள; இருக்க" என்ன இருந்தேன்; இருந்த நாளில்; (எ-று.)
 
     
(வி-ம்.) அடியார் அடியாள்-அடியார்க்கடியாள், கிடைப்பன ஆகிய
நன்மை இன்னமுள என மாற்றுக, இருக்க-இருப்பாயாக. (25)