முதுபேய் வரலாறு கூறியது 176. | நின்முனிவும் சுரகுருவின் முனிவும்அஞ்சி | | நிலையரிதென்று இமகிரிபுக் கிருந்தேற்கு ஒளவை தன்முனிவு மவன்முனிவுந் தவிர்க என்று சாதனமந் திரவிச்சை பலவுந் தந்தே. | (பொ-நி.) (முனிவும்) (முனிவும்) அஞ்சி இமகிரி புக்கு இருந்தேற்கு (முனிவும்) (முனிவும்) தவிர்க என்று விச்சை பலவும் தந்து; (எ-று.) (வி-ம்.)முனிவு - வெகுளி. சுரகுரு - சோழன். நிலை-இவ்விடத்து நிலைபெற்றிருத்தல். ஒளவை - தாயாகிய காளி. அவன்; சுரகுரு. சாதனம்- கருவியாகிய வித்தை. (24) இதுவும் அது 177. | உன்னுடைய பழவடியா ரடியாள் தெய்வ | | உருத்திரயோ கினியென்பாள் உனக்கு நன்மை இன்னமுள கிடைப்பனஇங் கிருக்க என்ன யானிருந்தேன் சிலகாலம் இருந்த நாளில். |
(பொ-நி.) அடியாள்(ஆகிய) உருத்திர யோகினிஎன்பாள் "நன்மை உள; இருக்க" என்ன இருந்தேன்; இருந்த நாளில்; (எ-று.) (வி-ம்.) அடியார் அடியாள்-அடியார்க்கடியாள், கிடைப்பன ஆகிய நன்மை இன்னமுள என மாற்றுக, இருக்க-இருப்பாயாக. (25) |