பக்கம் எண் :

இராசபாரம்பரியம்73


     (பொ-நி.) கரிகாலன், வரைதிரித்தருளி, நிற்க இது என்று புலிக்குறி
பொறித்து, அது மறித்தபொழுது; (எ-று.)

     (வி-ம்.)செண்டு; ஒரு போர்க்கருவி. ஒருகால் -ஒருசமயம்,  சிமயம்-
குவடு.  திரித்து - கீழும்  மேலுமாகத்  திருப்பி, திரித்தல்-நிலை  பெறுதல்.
முதுகில்-நடுவிடத்தில். பொறித்து-எழுதி. அது: இமயம்.  மறித்த -முன்போல்
நிலைநிறுத்திய.                                               (1)

நாரதர், கரிகாலனை அணுகி மொழிந்தது கூறியது

179.கால மும்மையுமு ணர்ந்தருளு நார தனெனும்
      கடவுள் வேதமுனி வந்துகடல் சூழ்பு வியில்நின்
போலு மன்னருள ரல்லர் என வாசி புகலாப்
    புகல்வ தொன்றுளது கேளரச என்று புகல்வான

     (பொ-நி.) வேதமுனி  வந்து  ஆசி புகலா ழுஅரச, புகல்வது; உளது
கேள்' என்று புகல்வான்; (எ-று.)

     (வி-ம்.)காலம் மும்மை - இறப்பு, எதிர்வு, நிகழ்வு என்னும் மூன்று
காலமும். ஆசி-வாழ்த்துரை; நல்லுரை. புகலா-புகன்று.               (2)

இதுவும் அது

180.பண்டு பாரதமெ னுங்கதைப ராச ரன்மகன்
      கர வெங்கரிமு கன்பரும ருப்பை யொருகைக்
கொண்டு மேருசிக ரத்தொருபு றத்தி லெழுதிக்
    குவல யம்பெறுத வப்பயனு ரைப்ப வரிதால்.
 

     (பொ-நி.) பராசரன் மகன் கதை பகர, கரிமுகன், மருப்பைக்கொண்டு,
மேரு சிகரத்து எழுதிக், குவலயம் பெறுதவப்பயன் அரிது; (எ-று.)

     (வி-ம்.) பராசரன்மகன்;  வியாதன். கரிமுகன்-ஆனை முகக் கடவுள்.
பருமருப்பு  -  பெரிய கொம்பு.  சிகரம்-உச்சி எழுதி; எழுத எனத் திரிக்க.
குவலயம்-உலகத்தார்.                                         (3)

நாரதர், இராசபாரம்பரியம் கூறத்தொடங்கியது கூறியது

181. பாரதத்தினுள வாகியப வித்ர கதையெம்
      பரம னற்சரிதை மெய்ப்பழைய நான்ம றைகளே
நேரதற்கு இதனை நான்மொழிய நீயெழுதி; முன்
    நெடிய குன்றின்மிசை யேயிசைவ தான கதைகேள்.