(பொ-நி.) பவித்ர கதை பரமன் நற்சரிதை (ஆகும்)அதற்கு நேர் நான்மறைகளே. கதை இதனை நான் மொழிய நீ எழுது, (எ-று.) (வி-ம்.) பவித்ரம் - தூயது. பரமன் - கண்ணன். நல்சரிதை-சிறந்த வரலாறு. நேர்-ஒப்பு. இசைவது (பாரதத்திற்கு) ஒப்பானது. (4) மறையின் இயல்பு கூறியது 182. | அதன்மு தற்கண்வரு மாதிமுதன் மாய னிவனே | | அப்ர மேயமெனு மெய்ப்ரியம தாக வுடனே பதமு மிப்பதம்வ குக்கவரு பாத மதுவும் பாத மான சில பார்புகழ வந்த வவையும். | (பொ-நி.) மாயன் அப்ரமேயம் எனும் மெய், அது ப்ரியம் ஆக உடனே. பதமும், பாதமதுவும், சில பார்புகழ வந்த அவையும்: (எ-று.) (வி-ம்.) அது - பாரதம். அப்ரமேயம் - அளவிடப்படாதது. மெய்- பாதம்-பிரிவு. (5) இதுவும் அது 183. | அந்த முட்படவி ருக்குமவ்வி ருக்கின் வழியே | | ஆகி வந்ததவ்வ ருக்கமும் வருக்க முழுதும் வந்த வட்டகமும் ஒட்டரிய சங்கி தைகளும் வாய்மை வேதியர்க டாம்விதியெ னும்வ கையுமே. |
(பொ-நி.) இருக்கும், வருக்கமும், அட்டகமும், சங்கிதைகளும், வகையும்; (எ-று.) (வி-ம்.)இருக்கு - வேதமந்திரம். வருக்கம்: சில இருக்கு சேர்ந்தது. அட்டகம் - சில அத்தியாயங்கள் சேர்ந்தது. ஒட்டு, தொடர்புற்ற சங்கிதை; எட்டு அட்டகம் சேர்ந்தது. விதி, ஒழுக்கமுறை. (6) |