பக்கம் எண் :

இராசபாரம்பரியம்75


திருமாலே அபயனாவனென்பது கூறியது

184. கமல யோனிமுத லாகவருமுங்கண் மரபிற்
       காவன் மன்னவர்க ளாகிவரு கின்ற முறையால்
அமல வேதமிது காணும்இதி லார ணநிலத்து
     அமல னேயபய னாகஅறி கென்ற ருளியே.
 

     (பொ-நி.)உங்கள்  மரபில், மன்னவர்கள்,  கமலயோனி முதலாக
வருகின்ற முறையால்,  இது வேதம்,அமலனே அபயனாக அறிக என்றருளி;
(எ-று.)

     
(வி-ம்.) கமலயோனி -பிரமன். அமலன்-திருமால்.           (7) 

நாரதர், இராசபாரம்பரியம் கூறிச்சென்றது கூறியது

185.அரணி வேள்வியில கப்படும கண்ட வுருவாய்
      அரவ ணைத்துயிலு மாதிமு தலாக அபயன்
தரணி காவலள வுஞ்செலமொ ழிந்து முனிவன்
     தானெ ழுந்தருள மாமுனிமொ ழிந்த படியே.
 

     (பொ-நி.)   ஆதிமுதலாக  அபயன்  காவல்  அளவும்  மொழிந்து
முனிவன் எழுந்தருள, முன் மொழிந்தபடி; (எ-று.)

     (வி-ம்.) அகண்டம்-கூறுபடுத்த முடியாதது. ஆதி - திருமால். தரணி-
உலகம். எழுந்தருள-போய்விட.                                 (8)

திருமால், நான்முகன், மரீசி, காசிபன், ஞாயிறு
வழிமுறை கூறியது

186.ஆதி மால்அமல நாபிகம லத்து அயனுதித்து
      அயன்ம ரீசியெனு மண்ணலைய ளித்த பரிசும்
காதல் கூர்தரும ரீசிமக னாகி வளரும்
     காசி பன்கதிர் அருக்கனைய ளித்த பரிசும்

     (பொ-நி.)   திருமாலின்    உந்திக்    கமலத்தில்    நான்முகன்
தோன்றினான்,   நான்முகன்   மரீசியைப்   பெற்றான். மரீசி காசிபனைப்
பெற்றான். காசிபன் கதிரவனை(சூரியனை)ப் பெற்றான். (எ-று.)

     (வி-ம்.) மால்-திருமால். நாபி-உந்தி (கொப்பூழ்.) அயன்-நான்முகன்.
அருக்கன்-கதிரவன்.                                         (9)