மனு, இக்குவாகு சிறப்புக் கூறியது 187. | அவ்வ ருக்கன்மக னாகிமனு மேதி னிபுரந்து | | அரிய காதலனை ஆவினது கன்று நிகரென்று எவ்வ ருக்கமும்வி யப்பமுறை செய்த பரிசும், இக்கு வாகுஇவன் மைந்தனென வந்த பரிசும். |
(பொ-நி.) மனு அருக்கன் மகனாகிப் புரந்து முறைசெய்தகதையும், இக்குவாகு இவன் மைந்தன் என வந்த பரிசும்; (எ-று.) (வி-ம்.) அருக்கன் - ஞாயிறு. மனு -மனுச்சோழன். மேதினி-உலகம். காதலன்-புதல்வன். வருக்கம்-மக்கட்கூட்டம். பரிசு-தன்மை. (10) ககுத்தன் சிறப்புக் கூறியது 188. | இக்கு வாகுவின்ம கன்புதல்வ னான உரவோன் | | இகலு வோன் இகலு ரஞ்செய்துபு ரந்த ரனெனும் சக்கு வாயிரமு டைக்களிறு வாகனமெனத் தானி ருந்துபொரு தானவரை வென்ற சயமும். |
(பொ-நி.) உரவோன், களிறு வாகனம் என இருந்து பொருதானவரை வென்ற சயமும்: (எ-று.) (வி-ம்.) மகன் புதல்வன்-பேரன். உரம்-வலிமை. உரவோன்-ககுத்தன். இகல்-பகை. புரந்தரன்-இந்திரன். ஆயிரம் சக்கு -ஆயிரம் கண். தானவர்- அசுரர். (11) மாந்தாதா, முசுகுந்தன் சிறப்புக் கூறியது 189. | ஒருது றைப்புனல்சி னப்புலியும் மானுமுடனே | | உண்ண வைத்தவுர வோனுலகில் வைத்த அருளும் பொருது றைத்தலைபு குந்துமுசு குந்தன் இமையோர் புரம டங்கலும ரண்செய்துபு ரந்த புகழும். | (பொ-நி.) புலியும் மானும் புனல் உண்ணவைத்த உரவோன் வைத்த அருளும் ; முசுகுந்தன்; புகுந்து, புரந்த புகழும்; (எ-று.) |