(வி-ம்.) புனல் - நீர். உரவோன் - மாந்தாதா. பொருதுறைத்தலை - போர்க்களம். இமையோர்புரம்-தேவலோகம். அடங்கலும் - முழுதும். அரண்- காவல். புரத்தல்-பாதுகாத்தல். (12) பிருதுலாட்சன், சிபிச் சிறப்புக் கூறியது 190. | கடல்க லக்கவெழு மின்னமுது தன்னை யொருவன் | | கடவுள் வானவர்க ளுண்ண அருள் செய்தகதையும் உடல்க லக்கறஅ ரிந்துதசை யிட்டும் ஒருவன் ஒருது லைப்புறவொடு ஒக்கநிறை புக்க புகழும். |
(பொ-நி.) ஒருவன், இன்னமுது தன்னை, வானவர்கள் உண்ண அருள்செய்த கதையும், ஒருவன் தசையிட்டு, நிறைபுக்க புகழும; (எ-று.) (வி-ம்.) கலக்க-கடைய. வானவர்- தேவர். கலக்கு அற - மனக்கலக்கம் அற. அரிந்து-அறுத்து. தசையிட்டு-புலாலைவைத்து, துலை-துலாத்தட்டு, புறவு- புறா. நிறை-எடையாக. (13) சுராதிராசன், இராசகேசரி, பரகேசரி சிறப்புக் கூறியது 191. | சுராதி ராசன்முத லாகவரு சோழன் முனநாள் | | சோழ மண்டல மமைத்தபிற கேழுலகையும் இராச கேசரிபு ரந்துபர கேச ரிகளாம் இருவ ராணைபுலி யாணையென நின்ற புகழும். |
(பொ-நி.) வருசோழன் சுராதிராசன் சோழமண்டலம் அமைத்தபிறகு, இருவர், புரந்து, ஆணை, புலி ஆணை என நின்ற புகழும்; (எ-று.) (வி-ம்.) சுராதிராசன் - சுராதிராசனென்பவன். ஆணை - கட்டளை . முதலாகஅமைத்து என இயைக்க. இருவர் புரந்து என இயைக்க. (அவர்கள்)ஆணை புலி ஆணை எனவே, புலிப்பொறி கொள்ளப்பட்டது குறித்தவாறாம். (14) கிள்ளிவளவன், கவேரன் இராசேந்திரமிருத்யுசித்துசிறப்புக் கூறியது 192. | கால னுக்கிதுவ ழுத்கெனவு ரைத்த வவனும் | | காவி ரிப்புனல்கொ ணர்ந்தவவ னும்பு வனியின் மேல னைத்துயிரும் வீவதிலை யாக நமன்மேல் வென்றி கொண்டவனு மென்றிவர்கள் கொண்டவிறலும். | |