பக்கம் எண் :

78கலிங்கத்துப்பரணி

     (பொ-நி.) உரைத்த அவனும், கொணர்ந்த அவனும் நமன்மேல்
வென்றி கொண்டவனும் என்று இவர்கள் கொண்ட விறலும்; (எ-று.)

     (வி-ம்.)காலன்-இயமன். வழக்கு-முறைமை. புவனி - உலகம்,  வீவது
- இறப்பது. நமன்-இயமன். வென்றி-வெற்றி. விறல்-வெற்றி.          (15)

சித்திரன், சமுத்திரசித்து பஞ்சபன் முதலியோர்சிறப்புக் கூறியது   

193.புலியெ னக்கொடியி லிந்திரனை வைத்த வவனும்
      புணரி யொன்றினிடை யொன்றுபுக விட்டவவனும்
வலியி னிற்குருதி உண்கெனவ ளித்த வவனும்
    வாத ராசனைவ லிந்துபணி கொண்ட வவனும்

     (பொ-நி.) இந்திரனை வைத்த அவனும், புகவிட்ட  அவனும், அளித்த
அவனும், பணிகொண்ட அவனும்; (எ-று.)

     (வி-ம்.)கொடியில்-தன் கொடியிடத்தில். புணரி-கடல். குருதி - செந்நீர்.
வாதராசன்-வாயுதேவன்; காற்றுக் கடவுள்.                          (16)

தூங்கெயில் எறிந்தோன், உபரிசரன் முதலியோர்சிறப்புக் கூறியது

194தூங்கு மூன்றெயி லெறிந்தவவ னுந்தி ரண்மணிச்
      சுடர்வி மானமது வான்மிசையு யர்த்த வவனும்
தாங்கள் பாரதமு டிப்பளவுநின்று தருமன்
    தன்க டற்படைத னக்குதவி செய்த வவனும்.

     (பொ-நி.) தூங்கெயில் எறிந்த அவனும், விமானமது உயர்த்த அவனும்,
உதவிசெய்த அவனும். (எ-று.)

     (வி-ம்.) தூங்கு - அசைந்து  செல்கின்ற. திரள் மணி -  கூட்டமாகிய
ஒளிமணிக்கற்கள். சுடர் விமானம்-ஒளியுள்ள விமானம். வான்-வானம். எயில்
- மதில். எறிதல்-அழித்தல்.                                     (17)