கிள்ளிவளவன், செங்கணான் சிறப்புக் கூறியது 195. | தளவ ழிக்குநகை வேல்விழிபி லத்தின் வழியே | | தனிந டந்துரகர் தங்கண்மணி கொண்ட வவனும் களவ ழிக்கவிதை பொய்கையுரை செய்ய உதியன் கால்வ ழித்தளையை வெட்டியர சிட்ட வவனும். |
(பொ-நி.) உரகர்தம் கண்மணி கொண்ட அவனும்; உதியன் கால்வழித்தளையை வெட்டி அரசிட்ட அவனும்; (எ-று.) (வி-ம்.)தளவு - முல்லை. நகை - முறுவல். பிலம் - குகை உரகர்தம் கண்மணி-நாககன்னிகை. களவழி-களவழி நாற்பது என்னும் நூல். பொய்கை - பொய்கையாரென்னும் புலவர். உதியன்-சேரமான் கணைக்கால் இரும்பொறை, தளை-விலங்கு. இட்ட-வைத்த. அவன்: செங்கணான். (18) கரிகாலன், சேரபாண்டியர்களை வென்றது கூறியது 196. | என்று மற்றவர்கள் தங்கள்சரி தங்கள் பலவும் | | எழுதி மீளஇதன் மேல்வழுதி சேரன் மடியத் தன்த னிக்களிற ணைந்தருளி வீர மகள்தன் தனத டங்களொடு தன்புயம ணைந்த பரிசும். |
(பொ-நி.) என்று சரிதங்கள் பலவும் எழுதி, மீள, இதன் மேல், வழுதி, சேரன் மடிய, களிறணைந்தருளி, அணைந்த பரிசும:் (எ-று.) (வி-ம்.) இது: இமயம். வழுதி - பாண்டியன். தனிக்களிறு - ஒப்பற்ற ஆண்யானை. அணைந்து- மேற்கொண்டு. வீரமகள் -வெற்றி மங்கை. தனம் - கொங்கை. (19) கரிகாலன், பிரதாபருத்திரன் கண்கொண்டது கூறியது 197. | தொழுது மன்னரே கரைசெய் பொன்னியில் | | தொடர வந்திலா முகரி யைப்படத்து எழுது கென்றுகண் டிதுமி கைக்கணென்று இங்க ழிக்கவே அங்க ழிந்ததும், | |