(பொ-நி.) பொன்னியில், வந்திலா முகரியை, எழுதுகென்று, கண்டு, இங்கு அழிக்கவே அங்கு அழிந்ததும்; (எ-று.) (வி-ம்.)பொன்னி-காவிரி. முகரி - வீண் ஆரவார முடையோன்; பிரதாபருத்திரன். படத்து - படத்தினிடத்து. மிகை-வேண்டாதது. இங்கு அழிக்க-இவ்விடத்துச் சிதைக்க. (20) கரிகாலன், பட்டினப்பாலை கொண்டது கூறியது 198 | தத்து நீர்வரால் குருமி வென்றதுந் | | தழுவு செந்தமிழ்ப் பரிசில் வாணர்பொன் பத்தொ டாறுநூ றாயி ரம்பெறப் பண்டு பட்டினப் பாலை கொண்டதும், |
(பொ-நி.) குருமி வென்றதும். பரிசில்வாணர், பத்தோடாறு நூறாயிரம் பெறப் பட்டினப்பாலை கொண்டதும்; (எ-று.) (வி-ம்.) வரால்-மீன்வகை. தத்து - தாவி யோடுகின்ற. பரிசில்வாணர் -உருத்திரங் கண்ணனார். பத்தொடு ஆறு நூறாயிரம் - பதினாறு இலக்கம். பட்டினப்பாலை: பத்துப் பாட்டுள் ஒன்று. குருமி: குருமியென்னும் ஒரு நகர்; கடப்பை மாவட்டத்துள்ளது. (21) கரிகாலன், சேர பாண்டியரை மானக்கேடு செய்தது கூறியது 199 | ஒருவர் முன்னோர்நாள் தந்து பின்செலா | | உதியர் மன்னரே மதுரை மன்னரென்று இருவர் தம்மையும் கிழிகள் சுற்று வித்து எரிவி விளக்குவைத்து இகல்வி ளைத்ததும். |
(பொ-நி.) ஒருவர் முன்பின் தந்து செலா இருவர் தம்மையும், கிழி சுற்றுவித்து, விளக்குவைத்து இகல் விளைத்ததும்: (எ-று.) (வி-ம்.) ஒருவர்: பகைவர். ஓர்நாள் - ஒருநாளும். பின் தந்து செலா-புறக்கொடை கொடாத. உதியர்: சேரர். கிழி-தந்தை. எரி விளக்கு - எரிகின்ற விளக்கு. வைத்து - தலையில் வைத்து. இகல் - வலிமை. விளைத்தது - தோற்றுவித்தது. (22) |