பராந்தகன் சிறப்புக் கூறியது 200. | வேழ மொன்றுகைத்து ஆலி விண்ணின்வாய் | | விசைய டங்கவும் அசைய வென்றதும் ஈழ முந்தமிழ்க் கூட லுஞ்சிதைந்து இகல் கடந்தோர் இசை பரந்ததும், |
(பொ-நி.) விண்ணின்வாய் வேழம் உகைத்து, அசையவென்றதும், சிதைத்து, கடந்ததோர் இசை பரந்ததும்; (எ-று.) (வி-ம்.) வேழம்-யானை. ஆலி- மழைத்துளி. விசை - பகைவர் எழுச்சி. அடங்க-குறைய; முழுதும். அசைய-கெட. ஈழம்-இலங்கை. சிதைத்து - அழித்து. கூடல்-மதுரை. இகல்-பகை. ஓர் இசை-ஒப்பற்ற புகழ். (23) இராசராசசோழன் சிறப்புக் கூறியது 201. | சதய நாள்விழா உதியர் மண்டலம் | | தன்னில் வைத்தவன் தனியொர் மாவின்மேல் உதய பானுவொத்து உதகை வென்றகோன் ஒருகை வாரணம் பலக வர்ந்ததும், |
(பொ-நி.) சதயநாள் விழா வைத்தவன், உதகை வென்றகோன், வாரணம் பல கவர்ந்ததும்; (எ-று.) (வி-ம்.) உதியர் மண்டலம் - சேரர் நாடு. மா - யானை. உதயபானு- எழுகின்ற ஞாயிறு. உதகை: ஓர் ஊர். வாரணம்-யானை. (24) இராசேந்திர சோழன் சிறப்புக் கூறியது 202. | களிறு கங்கைநீ ருண்ண மண்ணையில் | | காய்சி னத்தொடே கலவு செம்பியன் குளிறு தெண்டிரைக் குரைக டாரமும் கொண்டு மண்டலம் குடையுள் வைத்ததும், |
(பொ-நி.) செம்பியன் மண்ணையில் களிறு உண்ண, கடாரமும் கொண்டு குடையுள் மண்டலம் வைத்ததும்; (எ-று.) (வி-ம்.) மண்ணை; ஓர் ஊர். கலவு - பொருந்திய. செம்பியன் - இராசேந்திரசோழன். குளிறு-ஒலிக்கின்ற.திரை- |