பக்கம் எண் :

இராசபாரம்பரியம்81


பராந்தகன் சிறப்புக் கூறியது

200.வேழ மொன்றுகைத்து ஆலி விண்ணின்வாய்
    விசைய டங்கவும் அசைய வென்றதும்
ஈழ முந்தமிழ்க் கூட லுஞ்சிதைந்து
   இகல் கடந்தோர் இசை பரந்ததும்,

     (பொ-நி.) விண்ணின்வாய்   வேழம்   உகைத்து,  அசையவென்றதும்,
சிதைத்து, கடந்ததோர் இசை பரந்ததும்; (எ-று.)

     (வி-ம்.) வேழம்-யானை. ஆலி- மழைத்துளி. விசை - பகைவர் எழுச்சி.
அடங்க-குறைய; முழுதும். அசைய-கெட. ஈழம்-இலங்கை. சிதைத்து - அழித்து.
கூடல்-மதுரை. இகல்-பகை. ஓர் இசை-ஒப்பற்ற புகழ்.                  (23)

இராசராசசோழன் சிறப்புக் கூறியது

201.சதய நாள்விழா உதியர் மண்டலம்
    தன்னில் வைத்தவன் தனியொர் மாவின்மேல்
உதய பானுவொத்து உதகை வென்றகோன்
   ஒருகை வாரணம் பலக வர்ந்ததும்,

     (பொ-நி.)  சதயநாள்  விழா  வைத்தவன்,   உதகை   வென்றகோன்,
வாரணம் பல கவர்ந்ததும்; (எ-று.)

      (வி-ம்.) உதியர் மண்டலம் - சேரர் நாடு. மா - யானை. உதயபானு-
எழுகின்ற ஞாயிறு. உதகை: ஓர் ஊர். வாரணம்-யானை.                (24)

இராசேந்திர சோழன் சிறப்புக் கூறியது

202.களிறு கங்கைநீ ருண்ண மண்ணையில்
    காய்சி னத்தொடே கலவு செம்பியன்
குளிறு தெண்டிரைக் குரைக டாரமும்
   கொண்டு மண்டலம் குடையுள் வைத்ததும்,

     (பொ-நி.) செம்பியன்   மண்ணையில்  களிறு   உண்ண,  கடாரமும்
கொண்டு குடையுள் மண்டலம் வைத்ததும்; (எ-று.)

      (வி-ம்.)  மண்ணை;  ஓர்  ஊர்.  கலவு - பொருந்திய. செம்பியன் -
இராசேந்திரசோழன். குளிறு-ஒலிக்கின்ற.திரை-