பக்கம் எண் :

82கலிங்கத்துப்பரணி

அலைகளையுடைய.    குரை   கடாரம் - பல்வகை  ஒலிகளையுடைய
கடாரம்.அலை- ஒலி செய்கின்ற. மண்டலம் - உலகம். குடையுள்வைத்தல்-
தன் வெண்கொற்றக் குடையின் கீழ் அடக்கியதும்.                (25)

இராசாதிராசன் சிறப்புக் கூறியது

203.கம்பி லிச்சயத் தம்ப நட்டதும்
    கடிய ரண்கொள்கல் யாணர் கட்டறக்
கிம்பு ரிப்பணைக் கிரியு கைத்தவன்
   கிரிக ளெட்டினும் புலிபொ றித்ததும்

     (பொ-நி.) கிரி உகைத்தவன், சயத்தம்பம் நட்டதும்,கல்யாணர் கட்டற;
புலி பொறித்ததும்; (எ-று.)

     (வி-ம்.) கம்பிலி; ஒரு நகரம். சயத்தம்பம்-வெற்றித்தூண். கடி அரண்
- காவலையுடைய மதில்கள். கல்யாணர் - சளுக்கியர். கட்டற -நிலைகுலைய.
கிம்புரி - யானைத் தந்தத்தில் அணியும் பூண். பணை - யானை கட்டுமிடம்.
கிரி - யானை.(26)

இராசேந்திரதேவன் சிறப்புக் கூறியது

204.ஒருக ளிற்றின்மேல் வருக ளிற்றையொத்து
    உலகு யக்கொளப் பொருது கொப்பையிற்
பொருக ளத்திலே முடிக வித்தவன்
   புவிக விப்பதோர் குடைக வித்ததும்.

     (பொ-நி.) களிற்றை  ஒத்து,  கொப்பையிற்  பொருது,  முடிகவித்தவன்
குடைகவித்ததும்; (எ-று.)

     (வி-ம்.)வருகளிறு-(ஏறி) வருகின்ற யானை. உயக்கொள-பிழைத்தலைப்
பெறுமாறு. கொப்பை; ஓர் ஊர். பொருது-போர்செய்து. புவி-உலகம். கவித்தது
தன் முடிமீதென்க. (27)

இராசமகேந்திரன் சிறப்புக் கூறியது

205.பனுவலுக்கு முதலாய வேத நான்கில்
     பண்டுரைத்த நெறிபுதுக்கிப் பழையர் தங்கண்
மனுவி னுக்கு மும்மடி நான் மடியாஞ் சோழன்
   மதிக்குடைக்கீ ழறந்தளிர்ப்ப வளர்ந்த வாறும்,