பக்கம் எண் :

இராசபாரம்பரியம்83


     (பொ-நி.) நெறி புதுக்கி, நான்மடி ஆம் சோழன் குடைக்கீழ் அறம்
வளர்ந்த ஆறும்; (எ-று.)

     (வி-ம்.) பனுவல்-நூல். முதல் ஆய-முதன்மையான. பண்டு- முன்பு.
புதுக்கி-புதுப்பித்து. மும்மடி-மூன்று மடங்கு.  ஆம் - சிறந்தவன்  ஆகிய;
சோழனது குடை என்க. அறம் தளிர்ப்ப-அறம் தழைக்கும்படி.     (28)

முதற்குலோத்துங்கன் தோற்றம் கூறியது

206.குந்தளரைக் கூடற்சங் கமத்துவென்ற
     கோனபயன் குவலயங்காத் தளித்த பின்னை
இந்தநிலக் குலப்பாவை இவன்பாற் சேர
  என்ன தவஞ் செய்திருந்தாள் என்னத் தோன்றி.

     (பொ-நி.) அபயன் அளித்த பின்னை  பாவை  சேர என்ன தவம்
செய்திருந்தாள் என்னத் தோன்றி; (எ-று.)

     (வி-ம்.) குந்தளர் - குந்தளநாட்டு வீரர். கூடல்   சங்கமம் - கூடற்
சங்கமமென்னும் இடம். கோன்-அரசன். குவலயம்-உலகம். குலம்-மேன்மை. தோன்றி-பிறந்து.                                           (29)

குலோத்துங்கன் வெற்றிச் சிறப்புக் கூறியது

207.எவ்வளவு திரிபுவன முளவாய்த் தோன்றும்
     எவ்வளவு குலமறைக ளுளவாய் நிற்கும்
அவ்வளவு திகிரிவரை யளவுஞ் செங்கோல்
  ஆணைசெல்ல வபயன் காத் தளிக்கு மாறும்.

     (பொ-நி.) எவ்வளவு புவனம் தோன்றும், எவ்வளவு மறைகள் நிற்கும், அவ்வளவு திகிரிவரை அளவும், ஆணைசெல்ல அளிக்கும் ஆறும்; (எ-று.)

     (வி-ம்.) திரிபுவனம்-மூன்று உலகம். மறை-வேதம். வேத நெறிப்பட்ட
நாடு முழுவதும் என்க. திகிரிவரை-சக்கரவாளமலை. ஆணை -கட்டளை. (30)

கரிகாலன் இமயத்தில் எழுதி முடித்தது கூறியது

208.இப்பு றத்திமய மால்வரையின் மார்பி னகலத்து
     எழுதி னானெழுது தற்கரிய வேத மெழுதி
ஒப்பு றத்தனது தொன்மரபு மம்ம ரபின்மேல்
  உரைசெய் பல்புகழுமொன் றுமொழி யாதபரிசே.