பக்கம் எண் :

84கலிங்கத்துப்பரணி

     (பொ-நி.) மரபும், புகழும், ஒன்றும்  ஒழியாத பரிசுவரையின் மார்பின்
அகலத்து, வேதம் எழுதி ஒப்புற, எழுதினான்; (எ-று.)

     (வி-ம்.) இப்புறம்-தென்புறம். மார்பு-நடுஇடம். அகலம் - பரந்த இடம்,
எழுதி ஒப்புற-எழுதினால் ஒப்ப, பரிசு-தன்மை.                      (31)

முதுபேய் சொல்லி முடித்ததும் காளி வியந்ததும் கூறியது

209.எழுதி மற்றுரைசெய் தவரவர்கள் செய்பி ழையெலாம்
     எமர்பொ றுக்கஎன விப்படிமு டித்த இதனைத்
தொழுது கற்றனம் எனத்தொழுது சொல்லு மளவில்
  சோழ வம்சமிது சொன்ன அறிவென்ன வழகோ?

     (பொ-நி.) எழுதி, பொறுக்க, என இப்படி முடித்த  இதனை, கற்றனம்
எனச் சொல்லுமளவில், "சொன்ன அறிவு என்ன அழகோ," (எ-று.)

     (வி-ம்.) உரை செய்தல்-சொல்லல், எமர்-எம்மவர். சோழவம்சம்-சோழ
பரம்பரை.                                                   (32)

காளி குலோத்துங்கனை நினைந்து மகிழ்தல் கூறியது      

210.வையகமாங் குலமடந்தை மன்னபயன்
     தன்னுடைய மரபு கேட்டே
ஐயனையான் பெற்றெடுத்த அப்பொழுதும்
  இப்பொழுதொத் திருந்த தில்லை.

     (பொ-நி.) அபயன்  மரபுகேட்டு,  இப்பொழுது   ஒத்து பெற்றெடுத்த
அப்பொழுதும் இருந்ததில்லை; (எ-று.)

     (வி-ம்.) வையகம்- உலகம். குலம்-மேன்மை. மன்-தலைவன். அபயன்-
குலோத்துங்கன்.  மரபு- குலமுறை. ஐயன்:  குலோத்துங்கன், அப்பொழுதும் -
அவனைப் பெற்றெடுத்த அக்காலத்தும். இப்பொழுதும்-இப்பொழுது அடையும்
மகிழ்ச்சி. காளி குலோத்துங்கன் புகழைக் கேட்டதும் தன் மகனாகக் கொண்டு
பெற்றகாலத்துப் பெற்ற மகிழ்ச்சியினும் இப்போது பன்மடங்குமகிழ்கூர்ந்ததாகக்
கூறினாள்; ழுஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும்  தன்மகனைச்  சான்றோன் எனக்
கேட்ட தாய்' என வள்ளுவனாரும், ழுஈன்ற ஞான்றினும் பெரிதுவந் தனளே'