பக்கம் எண் :

86கலிங்கத்துப்பரணி

பேய்கள் காளியிடம் தம் மிகுபசி மொழிந்தது கூறியது

212.ஆறுடைய திருமுடியா னருளுடைய
    பெருந்தேவி அபயன் காக்கும்
பேறுடைய பூதமாப் பிறவாமல்
   பேய்களாப் பிறந்து கெட்டேம்.

     (பொ-நி.) "தேவி ! அபயன் காக்கும் பூதமாப் பிறவாமல்பேய்களகப்
பிறந்து கெட்டோம்," (எ-று.)

     (வி-ம்.) ஆறு-கங்கை. முடியான்-சிவன். அருள் உடைய - திருவருள்
கொண்ட. பூதங்களுக்குப் பலியிடல் அரசர் வழக்கம்.                   (1)

இதுவும் அது      

213.ஆர்காப்பா ரெங்களைநீ யறிந்தருளிக்
    காப்பதல்லால் அடையப் பாழாம்
ஊர்காக்க மதில்வேண்டா உயிர்காத்த
   உடம்பினைவிட் டோடிப் போதும்.

     (பொ-நி.) நீ காப்பதல்லால் ஆர் காப்பார்; பாழ்ஆம் ஊர்காக்க மதில்
வேண்டா; உடம்பினை விட்டு ஓடிப்போதும், (எ-று.)

     (வி-ம்.) அடைய-முழுவதும். ஓடிப்போதும்-இறப்போம்.

 இதுவும் அது      

214.ஓய்கின்றேம் ஓய்வுக்கு மினியாற்றேம்
    ஒருநாளைக் கொருநாள் நாங்கள்
தேய்கின்ற படிதேய்ந்து மிடுக்கற்றேம்
   செற்றாலும் உய்ய மாட்டோம்.

     (பொ-நி.)  ஓய்கின்றேம்;   ஆற்றேம்;    தேய்ந்து    மிடுக்கற்றேம்
;உய்யமாட்டோம்; (எ-று.)

     (வி-ம்.)ஓய்தல்-தளர்ச்சியடைதல். ஆற்றேம்-தாங்கமாட்டோம்;தேய்ந்து-
மெலிந்து. மிடுக்கு-எழுச்சி. செறுதல்-சினத்தல். உய்ய-பிழைக்க.           (3)