(வி-ம்.) கரி-(ஆண்)யானை. மருப்பு-தந்தம். புலர்தல்- வற்றுதல். பிடி- பெண்யானை. முகில்-மேகம். குருதி-செந்நீர். காலுதல்-உமிழ்தல். (11) இதுவும் அது 223 | வார்முரசி ருந்துவறி தேஅதிரு மாலோ | | வந்திரவில் இந்திரவில் வானிலிடு மாலோ ஊர்மனையில் ஊமனெழ ஓரியழு மாலோ ஓமவெரி ஈமவெரி போல்கமழு மாலோ . |
(பொ-நி.) முரசு வறிதே அதிரும்; இந்திரவில் இரவில் இடும்;மனையில் ஊமன் எழ, ஓரி அழும்; ஓமஎரி ஈமஎரிபோல் கமழும்; (எ-று.) (வி-ம்.)வார்முரசு - வாரால் கட்டப்பட்ட பேரிகை. வறிதே - வீணே. மனை-வீடு. இந்திரவில்- வானவில். ஊமன்- பேராந்தை. ஓரி - நரி. ஓம எரி- வேள்வி எரி. ஈமம்-சுடுகாடு. கமழும் -(தீநாற்றம்) வீசும். (12) இதுவும் அது 224 | பூவிரியு மாலைகள் | | புலால்கமழு மாலோ பொன்செய்மண மாலைஒளி போயொழியு மாலோ ஓவியமெ லாம்உடல் வியர்ப்பவரு மாலோ ஊறுபுனல் செங்குருதி நாறவரு மாலோ . |
(பொ-நி.) மலைகள்புலால் கமழும்; மணிமாலை ஒளி ஒழியும்; ஓவியம் எலாம் உடல் வியர்ப்ப வரும், புனல் குருதி நாறவரும்; (எ-று.) (வி-ம்.) மணி-இரத்தினம். ஓவியம்-சித்திரம், புனல்-நீர். குருதி-செந்நீர். நாற-தோன்ற. (13) |