பக்கம் எண் :

99

தீனான தினிதென்று மீதூண் விரும்பினால்
     தேகபீ டைகளே தரும்
செகராசர் சூனுவென ஏலாத காரியம்
     செய்தால் மனம்பொறார்காண்்

வானாடு புகழும்ஒரு சோணாடு தழையஇவண்
     வந்தவ தரித்தமுதலே!
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

     (இ-ள்.) வான்நாடு புகழும் ஒரு சோணாடு தழைய இவண் வந்து
அவதரித்த முதலே! - வானவர் புகழும் ஒப்பற்ற சோழநாடு சிறப்புற இங்கு
வந்து தோன்றிய முதல்வனே!, மயிலேறி......... குமரேசனே!-, தான் ஆசரித்து
வருதெய்வம் இது என்று பொய்ச்சத்தியம் செயின்விடாது - தான்
வழிபட்டுவருந் தெய்வம் இது என்று எண்ணி (அதன் முன்னிலையிலே)
பொய்ம்மொழி கூறினால் ஒறுக்காமல் விடாது; தன் வீட்டில் ஏற்றிய விளக்கு
என்று முத்தம்தனைக் கொடுத்தால் அது சுடும் - தன்னுடைய மனையில்
ஏற்றிய விளக்கு என்று முத்தங் கொடுத்தால் அவ் விளக்குச் சுடும்;
ஆனாலும் மேலவர்கள் மெத்தவும் தனது என்று அடாது செய்யின்
கெடுதிஆம் - எப்படி இருப்பினும் உயர்நிலையில் உள்ளவர்கள் தனக்கு
ஆதரவாக உள்ளவர்கள் என்று தவறு செயின் தீமை உண்டாகும்; ஆனை
தான் மெத்த பழக்கம் ஆனாலும் செய்யாது செய்தாற் கொன்றிடும் - யானை
நன்றாகப் பழகியிருந்தாலும் அதற்கு விருப்பமல்லாததைச் செய்தாற்
கொன்றுவிடும்; தீனானது இனிது என்று மீதூண் விரும்பினால் தேக
பீடைகளே தரும் - உணவு இனியது என்று மிகைபட விரும்பி உண்டால்
உடல்நோயையே உண்டாக்கும்; செகராசர் சூனு என ஏலாத காரியம்
செய்தால் மனம்பொறார் - உலக மன்னவரின் அரும்புதல்வன் என்று
நினைத்துத் தகாத வேலைகளைச் செய்தால் அரசர் உள்ளம்
பொறுக்கமாட்டார்கள்.