62.
ஓரம் சொல்லேல்
ஓரவிவ
காரமா வந்தவர் முகம்பார்த்
துரைப்போர் மலைக்குரங்காம்
உயர்வெள் ளெருக்குடன் முளைத்துவிடு மவர்இல்லம்
உறையும் ஊர் பாழ்நத்தம்ஆம்
தாரணியில்
இவர்கள்கிளை நெல்லியிலை போல்உகும்
சமானமா எழுபிறப்பும்
சந்ததியிலா துழல்வர் அவர்முகத் தினின்மூத்த
தையலே குடியிருப்பாள்
பாரமிவர்
என்றுபுவி மங்கையும் நடுங்குவாள்
பழித்ததுர் மரணமாவார்
பகர்முடிவி லேரவுர வாதிநர கத்தனு
பவிப்பர்எப் போதுமென்பார்
வாரமுடன்
அருணகிரி நாதருக் கனுபூதி
வைத்தெழுதி அருள் குருபரா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
|