பக்கம் எண் :

105

சீரிய தமிழ்ப்புலவர் வாக்கிலெழு கவியையும்
     சித்தர்தம துள்ளத்தையும்
தெரிவையர்கள் சிந்தையையும் இவ்வள வெனும்படி
     தெரிந்தள விடக்கூடுமோ

வாரிச மடந்தைகுடி கொண்டநெடு மாலுக்கு
     மருகனென வந்தமுருகா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

     (இ-ள்.) வாரிசமடந்தை குடிகொண்ட நெடுமாலுக்கு மருகன் என வந்த
முருகா - தாமரைமலரில் இருக்குந்திருமகள் வாழும் மார்பனான திருமாலுக்கு
மருகன் என்ற முறையிலே வந்த முருகனே!, மயிலேறி.........குமரேசனே!-, வாரி
ஆழத்தையும் புனல் எறியும் அலைகளையும் - கடலின் ஆழத்தையும் அது
வீசும் அலைகளையும், மானிடர்கள் சனனத்தையும் - மக்களின் பிறப்பையும்,
மன்னவர்கள் நினைவையும் - அரசர்கள் எண்ணத்தையும், புருஷர்
யோகங்களையும் - ஆடவர்களுக்கு வரும் சிறப்பையும், வானின் உயர்
நீளத்தையும் - வானத்தின் உயரத்தையும் நீளத்தையும், பாரில் எழு
மணலையும் - உலகில் தோன்றும் மணலையும், பல பிராணிகளையும் -
பலவகையான உயிர்களையும், படி ஆண்ட மன்னவரையும் - உலகாண்ட
அரசர்களையும், பருப்பதத்தின் நிறையும் - மலையின் நிறையையும், ஈசுரச்
செயலையும் - இறைவன் செய்வதையும், பனிமாரி பொழி துளியையும் -
பனியும் மாரியும் பெய்யும் துளிகளையும், சீரிய தமிழ்ப்புலவர் வாக்கில் எழு
கவியையும் - சிறந்த தமிழ்ப்புலவருடைய நாவிலிருநது விளையும் கவிதைச்
சிறப்பையும்; சித்தர் தமது உள்ளத்தையும் - சித்தருடைய நினைவின்
உறுதியையும், தெரிவையர்கள் சிந்தையையும் - பெண்களின் உள்ளத்தையும்,
இவ்வளவு எனும்படி தெரிந்து அளவிடக்கூடுமோ - இத்தகையவென்று கூறும்
முறையிலே ஆராய்ந்து அறுதியிட்டுக்கூற ஒவ்வுமே? (ஒவ்வாது).