முறையா நடத்தலால் சகலதீ வினைகளையும்
முளரிபோ லேதகிப்பார்
முதன்மைபெறு சிலைசெம்பு பிருதுவிக ளில்தெய்வ
மூர்த்தம்உண் டாக்குவிப்பார்
நிறையாக
நீதிநெறி வழுவார்கள் ஆகையால்,
நீள்மழை பொழிந்திடுவதும்,
நிலமது செழிப்பதும், அரசங்செங் கோல்புரியும்
நிலையும், மா தவர்செய்தவமும்,
மறையோர்க ளாலே விளங்கும் இவ்வுலகத்தின்
மானிடத் தெய்வம்இவர் காண்
மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே!
|
(இ-ள்.)
குறையாத காயத்திரி
ஆதி செபமகிமையும் - குற்றமில்லாத
காயத்திரி முதலானவற்றை ஓதும் பெருமையையும், கூறு சுருதிப் பெருமையும்
- சொல்லப்படும் மறையின் சிறப்பையும், கோதுஇலா ஆகம புராணத்தின்
வளமையும் - பிழையில்லாத ஆகமங்களின் சிறப்பையும் புராணங்களின்
சிறப்பையும், குலவு யாகாதி பலவும் - விளங்கும் வேள்வி முதலான
யாவற்றையும், முறைஆ நடத்தலால் - ஒழுங்காக நடத்துவதனால், சகல
தீவினைகளையும் - எல்லா வகையினுமுள்ள கொடிய வினைகளையெல்லாம்,
முளரி போல தகிப்பார் - நெருப்பைப் போலே நீக்கிக் கொள்வார்,
முதன்மைபெறு சிலைசெம்பு பிருதுவிகளில் - சிறப்புப் பெற்று கல்லினுஞ்
செம்பினும் மண்ணிலும், தெய்வ மூர்த்தம் உண்டாக்குவிப்பார் - தெய்வத்
தன்மையை ஏற்றி வைப்பார், நிறையாத நீதிநெறி வழுவார்கள் -
நன்னெறியிலிருந்து வழுவாமல் ஒழுங்காக இருப்பார்கள், ஆகையால் -
ஆதலினாலே, நீள் மழை பொழிந்திடுவதும் - மிகுதியாக மழைபெய்வதும்,
நிலமது செழிப்பதும் - மண் வளம் பெறுவதும், அரசர் செங்கோல் புரியும்
நிலையும் - மன்னவர்கள் நல்ல அரசாட்சி நிலையாகச் செய்வதும்,
|