3.
அரசர் இயல்பு
குடிபடையில்
அபிமானம், மந்திரா லோசனை,
குறிப்பறிதல், சத்யவசனம்,
கொடைநித்தம் அவரவர்க் கேற்றமரி யாதை பொறை,
கோடாத சதுருபாயம்
படிவிசா
ரணையொடுப்ர தானிதள கர்த்தரைப்
பண்பறிந் தேயமைத்தல்,
பல்லுயி ரெலாந்தன் உயிர்க்குநிக ரென்றே
பரித்தல், குற்றங்கள்களைதல்,
துடிபெறு தனக்குறுதி
யானநட்பகமின்மை,
சுகுணமொடு, கல்வியறிவு,
தோலாத காலம்இடம் அறிதல், வினை வலிகண்டு
துட்டநிக் ரகசௌரியம்,
வடிவுபெறு
செங்கோல் நடத்திவரும் அரசர்க்கு
வழுவாத முறைமையிதுகாண்
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே!
|