67.
திருவருட்
சிறப்பு
திருமகள்
கடாட்சம்உண் டானால் எவர்க்கும்
சிறப்புண்டு கனதையுண்டு
சென்றவழி யெல்லாம் பெரும்பாதை ஆய்விடும்
செல்லாத வார்த்தைசெல்லும்
பொருளொடு
துரும்புமரி யாதைஆம் செல்வமோ
புகல்பெருக் காறுபோல் ஆம்
புவியின்முன் கண்டுமதி யாதபேர் பழகினவர்
போலவே நேசம்ஆவார்
பெருமையொடு
சாதியில் உயர்ச்சிதரும் அனுதினம்
பேரும்ப்ர திட்டையுண்டாம்
பிரியமொடு பகையாளி கூடவுற வாகுவான்
பேச்சினிற் பிழைவராது
வருமென
நினைத்தபொருள் கைகூடி வரும்அதிக
வல்லமைகள் மிகவும்உண்டாம்
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
|