பக்கம் எண் :

111

நிதியரசர் எங்கே யிருந்தாலும் அவர்களொடு
     நேசம்ஒன் றாயிருக்கும்
நீதிமிகு நல்லோர்கள் எங்கிருந் தாலும்அவர்
     நிறைபட்சம் மறவார்கள்காண்

மதிலுடன் கோபுரமும் வாவியும் புடைசூழ
     மருவுசோ ணாட்டதிபனே
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

     (இ-ள்.) மதிலுடன் கோபுரமும் வாவியும் புடைசூழ மருபு சோணாட்டு
அதிபனே! - மதிலும் கோபுரமும் பொய்கையும் சூழ்ந்திருக்கும் சோழநாட்டுத்
தலைவனே!, மயிலேறி........குமரேசனே!-, கதிரவன் உதிப்பது எங்கே? -
ஞாயிறு காணப்படும் இடம் எங்கே?, நளினம் எங்கே? - தாமரை
யிருக்குமிடம் எங்கே?, உளம் களித்து மலர்ந்தது என்ன ? -
மனமகிழ்ச்சியுடன் தாமரை ஏன் மலர்கிறது?, கார்மேகம் எங்கே? -
கரியமுகில் எங்கே உள்ளது?, பசுந்தோகை எங்கே? - பச்சை மயில்
எங்குள்ளது?, கருத்தில் நட்பு ஆனது என்ன? - மனமுவந்து
நட்புக்கொண்டது ஏன்?, மதியம் எங்கே ? - திங்கள் எங்கே உள்ளது?
பெருங்குமுதம் எங்கே? - பெரிய அல்லி எங்கே உள்ளது?, முகம்மலர்ந்து
மகிழ்கொண்டது என்ன? - முகமலர்ச்சியுடனே இன்பமடைவது ஏன்?,
வல்இரவு விடிவது எங்கே - கொடிய இராப்பொழுது நீங்குவது எப்படி?,
கோழிஎங்கே? - சேவற்கோழியின் நிலைமை எப்படி?, மகிழ்ந்து கூவிடுதல்
என்ன? - சேவற்கோழி விடிவறிந்து எங்ஙனம் கூவுகிறது?, நிதி அரசர்
எங்கே இருந்தாலும் அவர்களொடு நேசம் ஒன்றாய் இருக்கும் - செல்வம்
மிக்க அரசர்கள் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் அவர்களுடைய நட்பு
மாறாமலே யிருக்கும்; நீதிமிகு நல்லோர்கள் எங்கு இருந்தாலும் அவர்
நிறைபட்சம் மறவார்கள் - நெறியறிந்த நல்லோர்கள் எவ்வளவு தொலைவில்
இருந்தாலும் அவர்களுக்குள் நிறைந்த அன்பை மறந்துவிடமாட்டார்கள்.