69.
காலம் அறிதல்
காகம் பகற்காலம்
வென்றிடும் கூகையைக்
கனகமுடி அரசர்தாமும்
கருதுசய காலமது கண்டந்த வேளையில்
காரியம் முடித்துவிடுவார்
மேகமும்
பயிர்காலம் அதுகண்டு பயிர்விளைய
மேன்மேலும் மாரிபொழியும்
மிக்கான அறிவுளோர் வருதருண காலத்தில்
மிடியாள ருக்கு தவுவார்
நாகரிகம்
உறுகுயில் வசந்தகா லத்திலே
நலம்என் றுகந்துகூவும்
நல்லோர் குறித்ததைப் பதறாமல் அந்தந்த
நாளையில் முடிப்பர்கண்டாய்
வாகனைய
காலைகல் மாலைபுல் எனும்உலக
வாடிக்கை நிசம்அல்லவோ
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
|