71.
யாக்கை நிலையாமை
மனுநல்மாந்
தாதாமுன் ஆனவர்கள் எல்லோரும்
மண்மேல் இருந்துவாழ்ந்து
மடியாதிருந்தபேர் இல்லைஅவர் தேடியதை
வாரிவைத் தவரும்இல்லை
பனியதனை
நம்பியே ஏர்பூட்டு கதையெனப்
பாழான உடலைநம்பிப்
பார்மீதில் இன்னும்வெகு நாளிருப் போம்என்று
பல்கோடி நினைவையெண்ணி
அனிதமாய்
விருதாவில் மாய்வதே அல்லாமல்
அன்பாக நின்பதத்தை
அர்ச்சித்து முத்திபெறல் வேண்டுமென் றெண்ணார்கள்
ஆசைவலை யிற்சுழலுவார்
வனிதையர்கள்
காமவி காரமே பகையாகும்
மற்றும்ஒரு பகையும்உண்டோ
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
|