பக்கம் எண் :

120

தேகியென வருபவர்க் கில்லையென் னாமலே
     செய்யவே வேண்டும்அல்லால்

அடைவுடன் பலகல்வி ஆராய்ந்து வித்துவான்
     ஆகவே வேண்டும்அல்லால்
அறிவினால் துரைமக்கள் ஆகவர வேண்டும்இவர்
     அதிகபூ பாலர்ஐயா

வடகுவடு கிடுகிடென எழுகடலும் அலையெறிய
     மணிஉரகன் முடிகள்நெரிய
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

     (இ-ள்.) வடகுவடு கிடுகிடு என - வடக்கிலுள்ள இமயமலை அதிரவும்,
எழுகடலும் அலையெறிய - ஏழுகடல்களும் பொங்கி அலைமோதவும், உரகன்
மணிமுடிகள் நெரிய - ஆதிசேடனின் மாணிக்கமுடிகள் நெரியவும்,
மயிலேறி.....குமரேசனே!-, ஐயா - ஐயனே!, சடம் ஒன்று எடுத்தால் - ஓருடல்
எடுத்தால், புவிக்கு நல்லவன் என்று தன்பேர் விளங்கல்வேண்டும் -
உலகிற்கு நல்லவன் எனத் தன் பெயர் விளக்கமுறுதல் வேண்டும்; இது
அல்லாது சதிருடன் மெய்ஞ்ஞானி என்று அவதரிக்க வேண்டும் - இஃது
அன்றேல் திறமையுடன் உண்மையான அறிவாளி என்று தோற்றம்
உறல்வேண்டும்; அல்லால் - அன்றேல், திடம்இனிய ரணசூரவீரன் இவன்
என்னவே திசைமெச்சவேண்டும் - வலிமைமிக்கவனாகிப் போர்க்களத்திலே
அச்சமுண்டாக்குபவனும் அஞ்சாமையுள்ளவனும் இவன் என்னும்படி
திக்கெலாம் புகழப்படல்வேண்டும்; அல்லால் - அன்றேல், தேகி என
வருபவர்க்கு இல்லையென்னாமலே செய்யவேவேண்டும் - ஈ என்று வந்து
இரப்பவர்க்கு இல்லையென்னாமற் கொடுத்திடல்வேண்டும்; அல்லால் -
அன்றேல், அடைவுடன் பலகல்வி ஆராய்ந்து வித்துவான் ஆகவே வேண்டும்
- ஒழுங்காகப் பல கலைகளையும் ஆராய்ச்சி செய்து புலவனாகவேண்டும்;
அல்லால் - அன்றேல், அறிவினால் துரைமக்கள் ஆகவரவேண்டும் -
அறிவின் திறமையால்