79.
இடுக்கண் வரினும் பயன்படுபவை
ஆறுதண்
ணீர்வற்றி விட்டாலும் ஊற்றுநீர்
அமுதபா னம்கொடுக்கும்
ஆதவனை ஒருபாதி கட்செவி மறைத்தாலும்
அப்போதும் உதவிசெய்வன்
கூறுமதி
தேய்பிறைய தாகவே குறையினும்
குவலயத் திருள்சிதைக்கும்
கொல்லைதான் சாவிபோய் விட்டாலும் அங்குவரு
குருவிக்கு மேய்ச்சலுண்டு
வீறுடன்
உதாரிதான் மிடியான போதினிலும்
மிகநாடி வருபவர்க்கு
வேறுவகை இல்லையென் றுரையா தியன்றன
வியந்துளம் மகிழ்ந்துதவுவான்
மாறுபடு
சூரசங் காரகம் பீரனே
வடிவேல் அணிந்தமுருகா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
|