83.
நற்புலவர் தீப்புலவர் செயல்
மிக்கான
சோலையிற் குயில்சென்று மாங்கனி
விருப்பமொடு தேடிநாடும்
மிடைகருங் காகங்கள் எக்கனி இருந்தாலும்
வேப்பங் கனிக்குநாடும்
எக்காலும்
வரிவண்டு பங்கே ருகத்தினில்
இருக்கின்ற தேனைநாடும்
எத்தனை சுகந்தவகை உற்றாலும் உருள்வண்
டினம்துர் மலத்தைநாடும்
தக்கோர்
பொருட்சுவை நயங்கள்எங் கேயென்று
தாம்பார்த் துகந்துகொள்வார்
தாழ்வான வன்கண்ணர் குற்றம்எங் கேயென்று
தமிழில்ஆ ராய்வர்கண்டாய்
மைக்காவி
விழிமாது தெய்வானை யும்குறவர்
வள்ளியும் தழுவு தலைவா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
|