பக்கம் எண் :

140

அணிந்தாலும், செங்கை ஒன்றாலும் விரல் மூன்றாலும் வாங்கினும் - ஒரு
கையாலும் மூன்று விரல்களாலும் ஏற்றாலும், திகழ் தம்பலத்தினோடும் -
(வாயில்) தரித்த தாம்பூலத்தோடும், அரியது ஒரு பாதையில் நடக்கின்ற
போதிலும் - அருமையான வழியொன்றிற் செல்லும்பொழுதும், அசுத்த
நிலமான அதிலும் - அழுக்கு நிலத்திலும், அங்கே தரிக்கினும் - (ஆகிய)
அந்த இடங்களிலே அணிந்தாலும் தந்திடின் தள்ளினும் - அளித்தபோது
மறுத்தாலும், அவர்க்கு நாகு என்பர் - அவர்கட்கு நரகம் கிடைக்கும் என்று
அறிஞர் கூறுவர்.

     (கருத்து) இங்குக் கூறப்பட்ட விதிப்படி திருநீறு வாங்கவேண்டும்.                                                  (87)

     88. திருநீறு அணியும் முறை

பத்தியொடு சிவசிவா என்றுதிரு நீற்றைப்
     பரிந்துகை யாலெடுத்தும்
பாரினில் விழாதபடி அண்ணாந்து செவியொடு
     பருத்தபுய மீதுஒழுக

நித்தம்மூ விரல்களால் நெற்றியில் அழுந்தலுற
     நினைவாய்த் தரிப்பவர்க்கு
நீடுவினை அணுகாது தேகபரி சுத்தமாம்
     நீங்காமல் நிமலன் அங்கே

சத்தியொடு நித்தம்விளை யாடுவன் முகத்திலே
     தாண்டவம் செய்யுந்திரு
சஞ்சலம் வராதுபர கதியுதவும் இவரையே
     சத்தியும் சிவனுமென்னலாம்

மத்தினிய மேருஎன வைத்தமு தினைக்கடையும்
     மால்மருகன் ஆனமுருகா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.