பக்கம் எண் :

142

விமலனை வணங்காத சென்னிஎன் சென்னிபணி
     விடைசெயாக் கையென்னகை

நாவார நினையேத்தி டாதவாய் என்னவாய்
     நல்தீர்த்தம் மூழ்காவுடல்
நானிலத் தென்னவுடல் பாவியா கியசனனம்
     நண்ணினாற் பலனேதுகாண்

மாவாகி வேலைதனில் வருசூரன் மார்புருவ
     வடிவேலை விட்டமுருகா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

     (இ-ள்.) வேலைதனில் மாஆகி வருசூரன் மார்பு உருவ
வடிவேலைவிட்ட முருகா! - கடல் நடுவிலே மாமரமாகிவந்த சூரன்
மார்பிற்படும்படி வடிவேலை விடுத்த முருகனே!, மயிலேறி....... குமரேசனே!-,
தேவ ஆலயம் சுற்றிடாத கால் என்ன கால்? - (நின்) தெய்வக்கோயிலை
வலம்வராத கால் காலன்று; தெரிசியாக்கண் என்ன கண்? - காணாத கண்
பயனற்ற கண்; தினமுமே நின்கமல பாதத்தை நினையாத சிந்தைதான் என்ன
சிந்தை? - நாடோறும் உன் தாமரைத்தாள்களை எண்ணாத உள்ளம்
பயனற்றது; மேவு ஆகமம் சிவபுராணம் அவை கேளாமல் விட்ட செவி
என்ன செவிகள்? - பொருந்திய சைவ ஆகமங்களையும்
சிவபுராணங்களையும் கேளாது விலகும் செவிகள் பயனற்றவை; விமலனை
வணங்காத சென்னி என் சென்னி - குற்றமற்ற சிவபரம்பொருளை வணங்காத
தலை பயனுடையது அன்று; பணிவிடை செயாக் கை என்ன கை? -
தொண்டு செய்யாத கைகள் பயனற்றவை; நாவுஆர நினை ஏத்திடாத வாய்
என்ன வாய்? - நாநிறைய உன்னை வாழ்த்தாத வாய் பயனற்றது; நானிலத்து
நல்தீர்த்தம் மூழ்கா உடல் என்ன உடல்? - உலகிலே தூய சிவதீர்த்தங்களில்
மூழ்காத மெய்யாற் பயனில்லை; பரவி ஆகிய சனனம் நண்ணினால் பலன்
ஏது? - பாவத்தன்மை பொருந்திய இத்தகைய பிறவி எடுத்ததனாலே
எப்பயனும் இல்லை.