பக்கம் எண் :

151

வண்டடர் கடப்பமலர் மாலிகா பரணம்அணி
     மார்பனே அருளாளனே
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

     (இ-ள்.) வண்டு அடர் கடப்பமலர் மாலிகா ஆபரணம் அணி
மார்பனே அருளாளனே - வண்டுகள் நெருங்கும் கடப்பமலரால் ஆன
மாலையையும் அணிகலனையும் அணிந்த மார்பினனே!
அருளையுடையவனே!, மயிலேறி......குமரேசனே!-, அண்டிவரும் உற்றார்
பசித்து அங்கு இருக்கவே அன்னியர்க்கு உதவுவோரும் - நெருங்கிப்
பழகும் உறவினர் பசியுடன் இருக்கும்போதும் பிறர்க்குதவும் தன்மையினரும்,
ஆசு தபு பெரியோர்செய் நேசத்தை விட்டுப்பின் அற்பரை அடுத்தபேரும் -
குற்றம் அற்ற நல்லோரிடங் கொண்ட நட்பை விடுத்துக் கீழோரை
நட்புக்கொண்ட வரும், கொண்ட ஒரு மனையாள் இருக்கப் பரத்தையைக்
கொண்டாடி மருவுவோரும் - மணம்புரிந்துகொண்ட இல்லாள்
ஒருத்தியிருக்கவும் வேசையைப் பாராட்டிக் கலப்போரும், கூறுசற்பாத்திரம்
இருக்கக் குணம் இலார்க்கு மிகு தானமது ஈந்தபேரும் - கூறப்பட்ட
தகுதியோர் இருக்கவும் தகாதவர்களுக்கு மிகுந்த பொருளை வழங்கியவரும்,
கண்டுவரு புதியோரை நம்பியே பழையோரைக் கைவிட்டு இருந்தபேரும் -
(அப்போதுதான்) பார்க்கப்பட்ட புதியவர்களை நம்பி முன்னிருந்தவரை
நீக்கிவிட்டவர்களும், கரிவாலைவிட்டு நரிவால் பற்றி நதிநீர் கடக்கின்ற
மரியாதை - யானையின் வாலை விட்டுவிட்டு நரியின் வாலைப் பிடித்துக்
கொண்டு ஆற்றுநிரைக் கடக்கும் தன்மையாகும்.

     காண் : முன்னிலை அசைச்சொல்.

     (விளக்கவுரை) மாலிகா (வட) - மாலை. ஆசு - குற்றம். தபுதல் -
கெடுதல். சற்பாத்திரம் : தாமே பொருளீட்டி வாழ முடியாத கூன், குருடு,
முடம் முதலான உறுப்புக்குறையினரும் முதியவரும் சிறு குழந்தைகளும்
பெண்களும் ஆவர். கரிவாலை விட்டு நரிவால் பிடித்தல்: மரபுத்தொடர்.
‘செல்வர்க்கழகு