பக்கம் எண் :

154

      97. அடைக்கலம் காத்தல்

அஞ்சல்என நாயினுடல் தருமன் சுமந்துமுன்
     ஆற்றைக் கடத்துவித்தான்
அடைக்கலம் எனும்கயற் காகநெடு மாலுடன்
     அருச்சுனன் சமர்புரிந்தான்

தஞ்சம்என வந்திடு புறாவுக்கு முன்சிபி
     சரீரம் தனைக்கொடுத்தான்
தடமலைச் சிறகரிந் தவனைமுன் காக்கத்
     ததீசிமுது கென்பளித்தான்

இன்சொலுட னேபூத தயவுடையர் ஆயினோர்
     எவருக்கும் ஆபத்திலே
இனியதம் சீவனை விடுத்தாகி லும்காத்
     திரங்கிரட் சிப்பர் அன்றோ

வஞ்சகிர வுஞ்சமொடு தாருகன் சிங்கமுகன்
     வளர்சூரன் உடல்கீண்டவா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

     (இ-ள்.) வஞ்ச கிரவுஞ்சமொடு தாருகன் சிங்கமுகன் வளர்சூரன்
உடல் கீண்டவா - வஞ்சகச்செயலுடைய கிரவுஞ்சமலையையும்
தாருகனையும் சிங்கமுகனையும் சூரனையும் உடலைப் பிளந்த வீரனே!,
மயிலேறி......... குமரேசனே!-, முன் அஞ்சல் என நாயின் உடல் தருமன்
சுமந்து ஆற்றைக் கடத்துவித்தான் - முற்காலத்தில் அஞ்சாதே என்று ஒரு
நாயைத் தருமபுத்திரன் சுமந்துசென்று ஆற்றைக் கடப்பித்தான்;
அடைக்கலம் எனும் கயற்குஆக நெடுமாலுடன் அருச்சுனன் சமர்புரிந்தான்
- அடைக்கலம் என வந்த கயன் என்னுங் கந்தருவனைக் காப்பாற்றத் (தன்
ஆருயிர் நண்பனும் தலைவனுமான) திருமாலுடன் அருச்சுனன் போரிட்டான்;
முன் தஞ்சம் என வந்திடு புறாவுக்குச் சிபி சரீரந்தனைக் கொடுத்தான் -
முற்காலத்தில் அடைக்கலம் என்று