பக்கம் எண் :

156

அறிந்த ததீசிமுனிவர் தம் முதுகெலும்பை யெடுத்துச் செய்து கொள்ளக்
கூறிவிட்டு யோகப்பயிற்சியினாலே உயிரைவிட்டார் அவனும் அவ்வாறே
செய்து வெற்றியுற்றான்.

மலைகளின் சிறகரிந்த கதை:

     ஒருகாலத்தில் மலைகளுக்குச் சிறகுகள் இருந்தனவாம். அவை
பறந்துசென்று நாடு நகரங்களின்மேல் விழுந்து அவற்றை அழித்து
வந்தனவாம் இந்திரன் அவற்றின் கொடுமையை அழிக்க எண்ணிச்
சிறகுகளை அரிந்தனனாம்.

     (கருத்து) அடைக்கலப்பொருளை ஆதரித்தல் வேண்டும்.   (97)

      98. தக்கவையும் தகாதவையும்

பாலினொடு தேன்வந்து சேரில்ருசி அதிகமாம்
    பருகுநீர் சேரின் என்னாம்
பவளத்தி னிடைமுத்தை வைத்திடிற் சோபிதம்
    படிகமணி கோக்கின்என்னாம்

மேலினிய மன்னர்பால் யானைசேர் வதுகனதை
    மேடமது சேரின்என்னாம்
மிக்கான தங்கத்தில் நவமணி உறின்பெருமை
    வெண்கல் அழுத்தின்என்னாம்

வாலிப மினார்களுடன் இளையோர்கள் சேரின்நலம்
    வளைகிழவர் சேரின்என்னாம்
மருவுநல் லோரிடம் பெரியோர் வரின்பிரியம்
    வருகயவர் சேரின்என்னாம்

மாலிகை தரித்தமணி மார்பனே தெய்வானை
    வள்ளிக்கு வாய்த்தகணவா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
    மலைமேவு குமரேசனே.

     (இ-ள்.) மணிமாலிகை தரித்த மார்பனே தெய்வானை வள்ளிக்கு
வாய்த்த கணவா - மணிமாலையணிந்த