பக்கம் எண் :

157

மார்பனே தெய்வயானைக்கும் வள்ளிக்குங் கணவனானவனே மயிலேறி.......
குமரேசனே!-, பாலினொடு தேன் வந்து சேரின் ருசி அதிகம் ஆம் -
பாலுடன் தேன் கலந்தால் இனிமை மிகும்; பருகும்நீர் சேரில் என்ஆம்
- குடிக்கும் நீர் பாலுடன் கலந்தால் இனிமை தருமா?, பவளத்தின்
இடைமுத்தை வைத்திடின் சோபிதம் - பவளத்தின் இடையிலே முத்தை
அமைத்தால் விளக்கமாகும்; படிகமணி கோக்கின் என்ஆம் - படிகமணியைத்
தொடுத்தால் விளக்கமுறுமா?, மேல் இனிய மன்னர்பால் யானை சேர்வது
கனதை - மேன்மையுடைய நல்ல அரசரிடம் யானை வருவது பெருமை;
மேடமது சேரின் என்ஆம் - ஆடு வருவது பெருமையா?, மிக்கான
தங்கத்தில் நவமணி உறின் பெருமை - உயர்ந்த பொன்னில் ஒன்பதுவகை
மணிகள் பதிப்பது சிறப்பு; வெண்கல் அழுத்தின் என் ஆம் - வெள்ளைக்
கல்லைப் பதிப்பது சிறப்பாகுமா? வாலிப மினார்களுடன் இளையோர்கள்
சேரின் நலம் - பருவமங்கையருடன் இளைஞர்கள் கூடுவது நன்மை;
வளைகிழவர் சேரின் என்ஆம் - முதுகு கூனிய முதியவர்கள் கூடுவது
நன்மையா?, மருவும் நல்லோரிடம் பெரியோர் வரின் பிரியம் -
நற்பண்புடையோரிடம் நல்லோர் சேர்வதே விருப்பமாகும்; வருகயவர் சேரின் என்ஆம் - தீயவர் கலப்பது விரும்பத்தக்கதா?

     (கருத்து) ஒத்த பண்புடைய பொருள்களுக்கே பொருத்தம்
உண்டாகும்.                                         (98)

          99. சான்றோர் தன்மை

அன்னதா னஞ்செய்தல் பெரியோர்சொல் வழிநிற்றல்
     ஆபத்தில் வந்தபேர்க்
கபயம் கொடுத்திடுதல் நல்லினம் சேர்ந்திடுதல்
     ஆசிரியன் வழிநின்றவன்

சொன்னமொழி தவறாது செய்திடுதல் தாய்தந்தை
     துணையடி அருச்சனைசெயல்
சோம்பலில் லாமல்உயிர் போகினும் வாய்மைமொழி
     தொல்புவியில் நாட்டியிடுதல்