10.
இவர்க்கு இது இல்லை
வேசைக்கு
நிசமில்லை திருடனுக்கு குறவில்லை
வேந்தர்க்கு நன்றியில்லை
மிடியர்க்கு விலைமாதர் மீதுவங் கணம்இலை
மிலேச்சற்கு நிறையதில்லை
ஆசைக்கு
வெட்கம்இலை ஞானியா னவனுக்குள்
அகம்இல்லை மூர்க்கன்தனக்
கன்பில்லை காமிக்கு முறையில்லை குணம்இலோர்க்
கழகில்லை சித்தசுத்தன்
பூசைக்கு
நவில் அங்க சுத்தியிலை யாவும்உணர்
புலவனுக் கயலோர்இலை
புல்லனுக் கென்றுமுசி தானுசிதம் இல்லைவரு
புலையற்கி ரக்கமில்லை
மாசைத்
தவிர்த்தமதி முகதெய்வ யானையொடு
வள்ளிக் கிசைந்த அழகா
மயிலேறி விளையாடு குகனே! புல்வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
|