பக்கம் எண் :

24

பற்று இராது. அஃதாவது அச்சமற்றவன் என்பதாகும். நிபுணன் (வடமொழி)
- நுண்ணுணர்வினன். வாகடம் - மருத்துவ நூல்.

     (கருத்து) செங்கோல் நடத்துவோன் அரசன். அரசியலுணர்ந்து
கூறுவோன் அமைச்சன். அச்சமற்றவன் வீரன். இலக்கண இலக்கிய மறிந்த
கவிஞனே கவிஞன், மருத்துவ நூலும் உடற்கூறும் உணர்ந்தவனே
மருத்துவன். தற்பெருமையின்றி உண்மைப் பொருளை யறிந்து
ஐம்புலனையும் அடக்கியவனே அறிஞன்.                     (11)

         12. விரைந்து அடக்குக

அக்கினியை, வாய்முந்து துர்ச்சனரை, வஞ்சமனை
     யாளைவளர் பயிர்கொள்களையை,
அஞ்சா விரோதிகளை, அநியாயம் உடையோரை,
     அகிர்த்தியப் பெண்களார்ப்பைக்,

கைக்கினிய தொழிலாளி யைக்,கொண்ட அடிமையைக்
     களவுசெய் யுந்திருடரைக்,
கருதிய விசாரத்தை, அடக்கம்இல் பலிசையைக்,
     கடிதான கோபந்தனை,

மெய்க்கினி தலாப்பிணியை, அவையுதா சீனத்தை,
     வினைமூண் டிடுஞ்சண்டையை,
விடமேறு கோரத்தை யன்றடக் குவதலால்
     மிஞ்சவிட லாகாதுகாண்

மைக்கினிய கண்ணிகுற வள்ளிதெய் வானையை
     மணம்செய்த பேரழகனே
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

     (இ-ள்.) மைக்கு இனிய கண்ணி குறவள்ளி தெய்வானையை
மணம்செய்த பேரழகனே - மைதீட்டிய அழகிய கண்களையுடைய
குறக்குடியிலே பிறந்த வள்ளியையும் தெய்வயானையையும் திருமணம் புரிந்த
அழியா அழகனே!, மயிலேறி.......குமரேசனே!, அக்கினியை - நெருப்பையும்,