பக்கம் எண் :

26

பேரான பெரியருக் கற்பரது கையினிற்
     பிரயோச னந்துரும்பு,
பெரிதான மோட்சசிந் தனையுள் ளவர்க்கெலாம்
     பெண்போகம் ஒருதுரும்பு,

தீராத சகலமும் வெறுத்ததுற விக்குவிறல்
     சேர்வேந்தன் ஒருதுரும்பு,
செய்யகலை நாமகள் கடாட்சமுள் ளோர்க்கெலாஞ்
     செந்தமிழ்க் கவிதுரும்பாம்.

வாராரும் மணிகொள்முலைவள்ளிதெய் வானையை
     மணம்புணரும் வடிவேலவா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.


      (இ-ள்.)
வார்ஆரும் மணிகொள்முலை வள்ளி தெய்வானையை
மணம்புணரும் வடிவேலவா - கச்சினாலிறுக்கப் பெற்ற மணிமாலை யணிந்த
முலைகளையுடைய வள்ளிக்குந் தெய்வயானைக்குங் கணவனே!, தாராளமாகக்
கொடுக்குந் தியாகிகள் தமக்கு நற்பொருள் துரும்பு - அளவு செய்யாமல்
வழங்கும் வள்ளல்களுக்கு நல்ல பொருள்கள் துரும்பு போலாகும்; தன்
உயிரை யெண்ணாத சூரனுக்கு எதிராளி தளமெலாம் ஒரு துரும்பு -
தன்னுடைய உயிரைப் பொருளாக நினையாத வீரனுக்குப் பகைவரின்
படைகளெல்லாம் ஒரு துரும்புக்குச் சமம், பேரான பெரியருக்கு அற்பரது
கையினில் பிரயோசனம் துரும்பு - புகழ்பெற்ற பெரியோர்களுக்குத் தாழ்ந்த
மக்கள் கையாற் பயன்பெறுதல் துரும்புக்கு நிகராகும், பெரிதான
மோட்சசிந்தனை யுள்ளவர்க்கெலாம் பெண்போகம் ஒரு துரும்பு - உயர்ந்த
வீடுபேற்றிலே நினைவுள்ளவர்களுக்குப் பெண்களாற் பெறும் இன்பம்
துரும்புக்கு நேராகும், தீராத சகலமும் வெறுத்த துறவிக்கு விறல்சேர்
வேந்தன் ஒரு துரும்பு - நீக்கமுடியாத எல்லாவற்றையும் வெறுத்துவிட்ட
துறவிக்கு வெற்றியையுடைய அரசன் ஒரு துரும்புக்கொப்பாவான்.