16.
பலர்க்கும் பயன்படுவன
கொண்டல்பொழி
மாரியும், உதாரசற் குணமுடைய
கோவுமூ ருணியின் நீரும்
கூட்டமிடும் அம்பலத்து றுதருவின் நீழலும்,
குடியாளர் விவசாயமும்,
கண்டவர்கள்
எல்லாம் வரும்பெருஞ் சந்தியிற்
கனிபல பழுத்தமரமும்,
கருணையுட னேவைத் திடுந்தணீர்ப் பந்தலும்
காவேரி போலூற்றமும்,
விண்டலத்துறைசந்தி
ராதித்த கிரணமும்,
வீசும்மா ருதசீதமும்,
விவேகியெனும் நல்லோ ரிடத்திலுறு செல்வமும்
வெகுசனர்க்கு பகாரமாம்,
வண்டிமிர்
கடப்பமலர் மாலையணி செங்களப
மார்பனே வடிவேலவா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
|