|
அயலார் மனைவிகளைக்
கலந்து திரிகின்றவர்களும், அன்னம் கொடுத்த
பேருக்கு அழிவை எண்ணினோர் - உணவளித்தவர்கட்குக் கெடுதி
நினைத்தவர்களும், அரசு அடக்கிய அமைச்சர் - அரசர்களை அழித்த
மந்திரிகளும், ஆலயம் இகழ்ந்தவர்கள் - இறைவர் திருக்கோயிலைப்
பழித்தவர்களும், விசுவாச காதகர் - நட்பைக் கெஇடுத்தவர்களும், அருந்தவர்
தமைப் பழித்தோர் - உயர்ந்த துறவிகளை இகழ்ந்தவர்களும், முன்
உதவியாய்ச் செய்த நன்றியை மறந்தவர் - துன்பமுற்ற காலத்திலே
துணைபுரிந்த நன்றியை மறந்து விட்டவர்களும், முகத்துதி வழக்குரைப்போர்
- தம்மைப் புகழ்ந்து கூறுவோர் சார்பாக (ஓரவஞ்சகமாக) வழக்குக்
கூறுகின்றவர்களும், முற்று சிவபத்தரை நடுங்கச் சினந்தவர்கள் - முதிர்ந்த
சிவனாடியவரை மனம் கலங்கக் கோபித்தவர்களும், முழுதும் பொய் உரை
சொல்லுவோர் - முழுப்பொய் கூறுவோர்களும் மன் ஒருவர் வைத்த பொருள்
அபகரித்தோர் - (தம்மிடம்) நிலையாக ஒருவர் வைத்த பொருளைக்
கவர்ந்தவர்களும், இவர்கள் மாநரகில் வீழ்வர் அன்றோ - ஆகிய இவர்கள்
கொடிய நரகில் வீழ்வார்கள் அல்லவா?
(கருத்து)
அரசரைப்
போர்க்களத்தில் விட்டு ஓடினவர்கள் முதலாகக்
கூறப்பட்ட இவர்கள் நரகத்தை இருப்பிடமாகக் கொள்வார்கள்.
(18)
|
19.
உடல்நலம்
மாதத் திரண்டுவிசை
மாதரைப் புல்குவது,
மறுவறு விரோசனந்தான்
வருடத் திரண்டுவிசை தைலம் தலைக்கிடுதல்
வாரத் திரண்டுவிசையாம்
மூதறிவி
னொடுதனது வயதினுக் கிளையவொரு
மொய்குழ லுடன்சையோகம்
முற்று தயிர் காய்ச்சுபால் நீர்மோர் உருக்குநெய்
முதிரா வழுக்கையிள நீர்
|
|