திருப்புல்வயல்
குமரேச
சதகம்
மூலமும்
உரையும்
குமரேச
சதகம் என்பது மூன்று சொற்களாலும் இரண்டு சந்திகளாலும்
ஆன தொடர். முன்னது இரு பெயரொட்டுப் பண்புத் தொகை; பின்னது
ஆறாம் வேற்றுமைத்தொகை. (குமரனாகிய ஈசன், குமரேசனது சதகம்).
சதகம்
என்பது நூறு செய்யுட்களால் உலகியல்பற்றி வரும் ஒருவகை
நூல். சதம் - நூறு. சதகம் - நூறு செய்யுட்களைக் கொண்டது.
"விளையு
மொருபொருள் மேலொரு நூறு
தழைய உரைத்தல் சதகம் என்ப," - (இலக்கண விளக்கம்.)
ஒரு பொருளென்பது
அகம் புறம் என்னும் இருவகைகளில் ஒன்றைப்
பற்றியது. இந்நூல் புறப்பொருள் பற்றியது. குமரேசனைத் தலைவனாக
அமைத்து இந்நூலைச் செய்திருப்பதாற் குமரேச சதகம் எனப்பட்டது.
அஃதாவது குமரக் கடவுளை வாழ்த்தும் முறையிலே எழுதப் பெற்றதென்க.
|