20.
விடாத குறை
தேசுபெறு
மேருப்ர தட்சணஞ் செய்துமதி
தேகவடு நீங்கவில்லை
திருமால் உறங்கிடும் சேடனுக்கு வணன்
செறும்பகை ஒழிந்த தில்லை
ஈசன்
கழுத்திலுறு பாம்பினுக்கி ரைவே
றிலாமலே வாயுவாகும்
இனியகண் ஆகிவரு பரிதியா னவனுக்
கிராகுவோ கனவிரோதி
ஆசிலாப்
பெரியோ ரிடத்தினில் அடுக்கினும்
அமைத்தபடி அன்றிவருமோ
அவரவர்கள னுபோகம் அனுபவித் திடல்வேண்டும்
அல்லால் வெறுப்பதெவரை
வாசவனும்
உம்பரனை வரும்விசய சயஎன்று
வந்துதொழு தேத்துசரணா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
|