24.
இனத்தில் உயர்ந்தவை
தாருவில்
சந்தனம் நதியினில் கங்கைவிர
தத்தினில் சோமவாரம்
தகைபெறு நிலத்தினில் காஷ்மீர கண்டம்
தலத்தினில்சி தம்பரதலம்
சீருலவு
ரிஷிகளில் வசிட்டர்பசு விற்காம
தேனுமுனி வரில்நாரதன்
செல்வநவ மணிகளில் திகழ்பதும ராகமணி
தேமலரில் அம்போருகம்
பேருலவு
கற்பினில் அருந்ததி கதித்திடு
பெலத்தில்மா ருதம்யானையில்
பேசில்ஐ ராவதம் தமிழினில் அகத்தியம்
பிரணவம் மந்திரத்தில்
வாரிதியி
லேதிருப் பாற்கடல் குவட்டினில்
மாமேரு ஆகும் அன்றோ
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
|
(இ-ள்.)
மயிலேறி..........குமரேசனே!, தாருவில் சந்தனம் - மரங்களிலே
சந்தன மரம், நதியினிற் கங்கை - ஆறுகளிலே கங்கையாறு, விரதத்தினிற்
சோமவாரம் - நோன்புகளிலே திங்கட்கிழமை நோன்பு, தகைபெறு
நிலத்தினில் காஷ்மீரகண்டம் - பெருமைமிக்க நாடுகளிலே காஷ்மீரம்,
தலத்திற் சிதம்பரதலம் - நகரங்களிலே சிதம்பரம், சீருலவு ரிஷிகளில்
வசிட்டர் - சிறப்புடைய இருடிகளிலே வசிட்டர், பசுவிற் காமதேனு -
பசுக்களிலே காமதேனு, முனிவரில் நாரதன் - முனிவர்களிலே நாரதர்,
செல்வ நவமணிகளில் திகழ்பதுமராகமணி - செல்வமாகிய ஒன்பது மணிகளில்
விளக்கமான பதுமராகம், தேன்மலரில் அம்போருகம் - தேனையுடைய
மலர்களில் தாமரை மலர், பேருலவு கற்பினில் அருந்ததி - புகழ்பெற்ற
கற்பரசிகளில்
|