பக்கம் எண் :

47

பெருமையுடன் ஆண்மையில் லாதஒரு பிள்ளையைப்
     பெற்றென பெறாமலென்ன
பிரியமாய் உள்ளன்பி லாதவர்கள் நேசம்
     பிடித்தென விடுக்கில்என்ன

தெருளாக மானம்இல் லாதவொரு சீவனம்
     செய்தென செயாமல் என்ன
தேகியென வருபவர்க் கீயாத செல்வம்
     சிறந்தென முறிந்தும் என்ன

மருவிளமை தன்னிலில் லாதகன் னிகைபின்பு
     வந்தென வராமலென்ன
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

     (இ-ள்.) மயிலேறி.........குமரேசனே! -, தருணத்தில் உதவிசெய்யாத
நட்பாளர் பின்தந்து என தராமல் என்ன - காலத்திலே துணைபுரியாத
நண்பர்கள் காலங்கடந்தபிறகு துணைபுரிந் தென்னபயன்?
துணைபுரியாமையாலும் என்ன கெடுதல்? தராதரம் அறிந்து முறைசெய்யாத
மன்னரைச் சார்ந்து என்ன நீங்கில் என்ன - ஏற்றத்தாழ்வு கண்டு முறைகூறாத
அரசர்களை அடுத்திருப்பதால் என்ன பயன் நீங்கிவிட்டால் என்ன கெடுதல்?
பெருமையுடன் ஆண்மையில்லாத ஒரு பிள்ளையைப் பெற்று என்ன பெறாமல்
என்ன - தகுதியும் வீரமும் இல்லாத ஒரு மகனைப் பெற்றுப் பயன் என்ன
பெறாவிட்டால் கெடுதி என்ன? பிரியமாய் உள்ளன்பு இல்லாதவர்கள் நேசம்
பிடித்து என விடுக்கில் என்ன - விருப்பத்துடன் உள்ளத்திலே அன்பு
இல்லாதவர்களின் நட்பைப் பெற்றால் என்ன பயன் பெறாவிட்டால் என்ன
கெடுதி? தெருளாக மானமில்லாததொரு சீவனம் செய்து என செய்யாமல்
என்ன - அறிவுடன் மானமும் இல்லாத வாழ்க்கை நடத்தி என்ன பயன்
விட்டுவிட்டால் என்ன கெடுதல்? தேகி என வருபவர்க்கு ஈயாத செல்வம்
சிறந்து