27.
பயன்
என்ன?
கடல்நீர்
மிகுந்தென்ன ஒதிதான் பருத்தென்ன
காட்டிலவு மலரில்என்ன
கருவேல் பழுத்தென்ன நாய்ப்பால் சுரந்தென்ன
கானில்மழை பெய்தும்என்ன
அடர்கழுதை
லத்திநிலம் எல்லாம் குவிந் தென்ன
அரியகுணம் இல்லாதபெண்
அழகாய் இருந்தென்ன ஆஸ்தான கோழைபல
அரியநூல் ஓதியென்ன
திடம்இனிய
பூதம்வெகு பொன்காத் திருந்தென்ன
திறல்மிகும் கரடிமயிர்தான்
செறிவாகி நீண்டென்ன வஸ்த்ரபூ டணமெலாம்
சித்திரத் துற்றும் என்ன
மடமிகுந்
தெவருக்கும் உபகாரம் இல்லாத
வம்பர்வாழ் வுக்குநிகராம்
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
|