|
(இ-ள்.)
மயிலேறி...........குமரேசனே!,
கடல் நீர் மிகுந்து என்ன -
கடலிலே மிகுதியான நீர் இருந்து பயன் என்ன? ஒதிதான் பருத்து என்ன -
ஒதியமரம் பருத்திருந்து பயன் என்ன?, காட்டு இலவு மலரில் என்ன -
காட்டிலவு மலர்ந்தால் பயன் என்ன?, கருவேல் பழுத்து என்ன -
கருவேலமரம் பழுத்துப் பயன் என்ன?, நாய்ப்பால் சுரந்து என்ன -
நாய்க்குப் பால் சுரந்தால் பயன் என்ன?, கானில் மழைபெய்தும் என்ன -
காட்டிலே பெய்த மழையால் யாருக்குப் பயன்?, அடர்கழுதை லத்திநிலம்
எல்லாம் குவிந்து என்ன - மிகுதியாகக் கழுதைச் சாணம் நிலமுழுதும்
குவிந்தாலும் பயன் என்ன?, அரிய குணம் இல்லாத பெண் அழகாய்
இருந்து என்ன? - நற்பண்பிலாத நங்கை அழகாயிருந்தாற் பயனுண்டோ?,
ஆஸ்தான கோழை பல அரியநூல் ஓதி என்ன - அவையிலே பேச
அஞ்சுங் கோழை அருமையான பல கலைகளைக் கற்றும் பயனேது?,
திடமினிய பூதம் வெகுபொன் காத்திருந்து என்ன - பேராற்றலுடைய பூதம்
மிக்க செல்வத்தைக் காத்திருந்தாலும் அதனால் பயனடையுமோ?
திறல்மிகும் கரடிமயிர்தான் செறிவாகி நீண்டு என்ன? - வலிமைமிக்க
கரடிக்கு அடர்த்தியான நீண்ட மயிரிருப்பதால் ஏது பயன்?,
வஸ்த்ரபூடணமெல்லாம் சித்திரத்து உற்றும் என்ன - ஆடையும் அணியும்
ஓவியத்திற் கிருந்தால் ஏது பயன்?, மடம்மிகுந்து எவருக்கும் உபகாரம்
இல்லாத வம்பர் வாழ்வுக்கு நிகராம் - அறிவின்றி, மற்றோருக்குப்
பயன்படாத வீணரின் வாழ்வுக்குச் சமமாம்.
(கருத்து)
பண்பிலாப்
பெண்ணின் அழகும் அவைக்கஞ்சுவோரின்
கல்வியும் மற்றோர்க்குப் பயன்படாத பேதையரின் செல்வத்திற்குச் சமம்.
(27)
|
28.
மக்கட்பதர்
தன்பெருமை
சொல்லியே தன்னைப் புகழ்ந்தபதர்
சமர்கண் டொளிக்கும்பதர்
தக்கபெரி யோர்புத்தி கேளாத பதர்தோழர்
தம்மொடு சலிக்கும் பதர்
|
|