பின்புகாணாஇடம்
தன்னிலே புறணிபல
பேசிக்க ளிக்கும்பதர்
பெற்றதாய் தந்தைதுயர் படவாழ்ந் திருந்தபதர்
பெண்புத்தி கேட்கும் பதர்
பொன்பணம்
இருக்கவே போயிரக் கின்றபதர்
பொய்ச்சாட்சி சொல்லும்பதர்
புவியோர் நடத்தையை இகழ்ந்தபதர் தன்மனைவி
புணர்தல்வெளி யாக்கும்பதர்
மன்புணரும்
வேசையுடன் விபசரிக் கின்றபதர்
மனிதரில் பதரென்பர்காண்
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
|
(இ-ள்.)
மயிலேறி
.......குமரேசனே!-, தன் பெருமை சொல்லியே
தன்னைப் புகழ்ந்த பதர் - தன் பெருமையைக் கூறிப் புகழ்ந்துகொண்ட
பதரும், சமர்கண்டு ஒளிக்கும் பதர் - போரைக் கண்டு பதுங்கும் பதரும்,
தக்க பெரியோர் புத்தி கேளாத பதர் - நல்ல பெரியோரின் அறிவுரைக்குச்
செவிகொடாத பதரும், தோழர் தம்மொடு சலிக்கும் பதர் - நண்பரிடம் தன்
குறையைக் கூறிக் கவலைப்படும் பதரும், பின்பு காணா இடந்தன்னிலே
புறணிபல பேசிக் களிக்கும் பதர் - (ஒருவரைப்பற்றி அவர்முன் இல்லாமல்)
அவர் சென்றபின்னும், அவரைக் காணாதபோதும் அவரைப்பற்றிக் குறைகூறி
மகிழும் பதரும், பெற்ற தாய் தந்தை துயர்பட வாழ்ந்திருந்த பதர் -
தன்னையீன்ற பெற்றோர்கள் வருந்திக்கிடக்கத் தான்மட்டும் இனிமையுடன்
வாழும் பதரும், பெண்புத்தி கேட்கும் பதர் - பெண்ணின் மொழிகளைக்
கேட்டு நடக்கும் பதரும், பொன்பணம் இருக்கவே போய் இரக்கின்ற பதர்
- பொன்னும் பணமும் வைத்துக்கொண்டே பிறரிடம் இரந்துநிற்கும் பதரும்,
பொய்ச்சாட்சி சொல்லும் பதர் - பொய்க்கரிகூறும் பதரும், புவியோர்
நடத்தையை யிகழ்ந்த பதர் - உலகிலுள்ளவரைப்
|