மதமது
மிகும்பரம லோபரால் உபகாரம்
மற்றொருவ ருக்குமுண்டோ
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
|
(இ-ள்.)
மயிலேறி.........குமரேசனே!
-, பதராகிலும் கனவிபூதி
விளைவிக்கும் - பதராயிருப்பினும் உயர்ந்த திருவெண்ணீற்றை விளைவிக்கப்
பயன்படும்; பழைமை பெறுசுவராகிலும் பலருக்கு மறைவாகும் மாடு
உரிஞ்சிடும் - பழைமையான குட்டிச்சுவராயினும் மறைய அமர்வோருக்கும்
மாடு தன் தினவைத் தீர்த்துக்கொள்ள உடம்பைத் தேய்த்துக்கொள்ளவும்
பயன்படும்; மலம் பன்றிகட்கு உபயோகம் ஆம் - மலமும் பன்றிகளின்
உணவாகும்; கதம் மிகு கடா என்னில் உழுது புவிகாக்கும் - சீற்றமுடைய
எருமைக்கடாவும் உழுது உலகை உண்பிக்கும்; வன்கழுதையும் பொதிசுமக்கும்
- வலிய கழுதையும் மூட்டை சுமக்கும்; கல்லெனில் தேவர்களும் ஆலயமும்
ஆம் - கல்லானது தெய்வங்களாகவும் திருக்கோயில்களாகவும் மாறி நிற்கும்;
பெருங்கான் புற்று அரவமனையாம் - பெரிய காட்டிலுள்ள புற்றுக்கள்
பாம்பிற்கு இருப்பிடமாகும்; இதம்இலாச் சவமாகிலும் சிலர்க்கு உதவிசெயும்
- நலமில்லாத பிணமானாலும் (அதை அடக்கஞ் செய்யும் முறையில்) சில
தொழிலாளிகட்கு வருவாய் கொடுக்கும்; இழிவுறு குரங்காயினும்
பிடித்தவர்க்கு இரக்க உதவிசெயும் - தாழ்வான குரங்கானாலும் (தன்னைப்)
பிடித்தவர்களுக்குப் பிச்சை எடுக்கத் துணையாகும்; வாருகோல் ஏற்ற
மாளிகை விளக்கும் - துடைப்பம் உயர்ந்த மாளிகையைத் தூய்மை
செய்யும்; மதமது மிகும் பரம லோபரால் மற்றொருவருக்கு உபகாரம்
உண்டோ?- செருக்குப்பிடித்த பெரிய கஞ்சத்தனமுடையவர்களாற்
பிறருக்குச் சிறிதும் நன்மையில்லை.
(அருஞ்சொற்கள்)
இதம் - நன்மை. கதம் - சீற்றம்.
(கருத்து)
ஈயாதவர்களால்
எவருக்கும் நலமில்லை. (33)
|