34.
ஈயாதவர் இயல்பு
திரவியம்
காக்குமொரு பூதங்கள் போல்பணந்
தேடிப் புதைத்துவைப்பார்
சீலைநல மாகவும் கட்டார்கள் நல்அமுது
செய்துணார் அறமும்செயார்
புரவலர்செய்
தண்டந் தனக்கும்வலு வாகப்
புகுந்திருட ருக்கும்ஈவார்
புலவரைக் கண்டவுடன் ஓடிப் பதுங்குவார்
புராணிகர்க் கொன்றும்உதவார்
விரகறிந்
தேபிள்ளை சோறுகறி தினுமளவில்
வெகுபணம் செலவாகலால்
விளையாடு கிழவனாம் பிள்ளையே பிள்ளையென
மிகுசெட்டி சொன்னகதைபோல்
வரவுபார்க்
கின்றதே அல்லாது லோபியர்கள்
மற்றொருவ ருக்கீவரோ
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
|