38.
அறியலாம்
மனத்தில்
கடும்பகை முகத்தினால் அறியலாம்
மாநிலப் பூடுகளெலாம்
மழையினால் அறியலாம் நல்லார்பொ லார்தமை
மக்களால் அறியலாம்
கனம்மருவு
சூரரைச் சமரினால் அறியலாம்
கற்றவொரு வித்துவானைக்
கல்விப்ர சங்கத்தி னாலறிய லாம்குணங்
களைநடையி னாலறியலாம்
தனதகம்
அடுத்தது பளிங்கினால் அறியலாம்
சாதிசொல் லால்அறியலாம்
தருநீதி கேள்வியால் அறியலாம் பிணிகளைத்
தாதுக்க ளாலறியலாம்
வனசவிக
சிதவதன பரிபூர ணானந்த
வாலவடி வானவேலா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
|